Kanyakumari

News February 7, 2025

கடிதம் எழுதும் போட்டி: மார்ச் 15 கடைசி நாள்

image

தபால் துறை சார்பில் சர்வதேச அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். போட்டியின் தலைப்பு ‘கடலை பாதுகாக்கும் முறை மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கம் கடிதம்’. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மார்ச் 15-க்குள் நாகர்கோவில் தபால் துறை கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

கோணத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்.10ஆம் தேதி பிரதம அமைச்சரின் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் PMNAM(Pradhan Mantri National Apprenticeship Mela) நடைபெற உள்ளது. மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஐடிஐ பயின்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 7, 2025

போலீசில் மனு கொடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

image

குமரி எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்திலும், எஸ்பி-யிடமும் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் ஸடாலினின் துரித நடவடிக்கையால் காவல்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து, மனு கொடுப்போர் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து?

News February 7, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.7) காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவம் நியமிக்க கேட்டு ரப்பர் கழக தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 64வது நாளாக உண்ணாவிரதம்.#மாலை 4 மணிக்கு பார்வதிபுரம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க கேட்டு பாக்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.30 மணிக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம.

News February 7, 2025

மோசடியில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள்!

image

வங்கிசாரா நிதி நிறுவன(Non-Banking Financial Institutions) மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு பதிவு ஒன்றை யாகுமரி மாவட்ட காவல்துறை தனது ‘X’ பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. http://rbi.org.in/commanman/english/scripts/NBSÇ’S.aspx என்ற வலைதளத்தில் மேலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மோசடியில் சிக்காமல் பாதுகாப்பக இருக்குமாறும் அறிவிறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News February 6, 2025

அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், “அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடித எழுதும் போட்டி நடைபெறுகிறது; 9-15 வயதுக்குட்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்கலாம்; நீங்கள் கடல் என கற்பனை செய்துகொண்டு, கடலை பாதுகாக்க தேவையான முக்கியத்துவம் மற்றும் முறைகளை மற்றவர்களுக்கு விளக்கும் கடிதமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News February 6, 2025

குமரியில் 30 மசாஜ் சென்டர்கள் மூடல்!

image

நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்கள், இளைஞர்களை ஈடுபடுத்தி வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கி வரும் மசாஜ் அதிரடி சோதனை செய்து 30 மசாஜ் சென்டர்களை போலீசார் நேற்று மூடியுள்ளனர். இதேபோல் மார்த்தாண்டம் பகுதியிலும் மூடப்பட்டன.

News February 6, 2025

குமரி எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை

image

‘தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்கள்; தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்திற்கு வழங்கி வந்த மத்திய அரசின் நிதி குறைப்பு; பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவி வழங்காமல் இருப்பது; ஆகியன குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

News February 6, 2025

முதல்வரை வரவேற்ற குமரி மேயர்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று(பிப்ரவரி 6) வருகை தந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் திமுகனவிர் பலர் கலந்துகொண்டனர்.

News February 6, 2025

பார்சல் சிறப்பு முகாமில் எந்தெந்த பொருள் அனுப்பலாம்!

image

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அஞ்சலக பார்சல் சிறப்பு முகாமில் நூல் தொழில் மற்றும் துணி பொருட்கள், மருத்துவ தயாரிப்புகள், மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப அஞ்சல் துறையின் பார்சல் சேவையை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!