India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 500 படுக்கை வசதி கொண்ட இங்கு 500 மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்காக வசதிகள் பல இங்கு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் 5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 50 (23+27) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <

குமரி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- குமரியில் ஆக.30, 31ல் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடக்கிறது. இந்த ஊர்வலம் நாகர்கோவில் முதல் சொத்தவிளை கடற்கரை உட்பட 11 இடங்களில் நடைபெறுகிறது. எனவே ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள மதுபானக் கடைகள் & எப்.எல். உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கி முடியும் வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

குமரி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <

குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்; மருங்கூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது அதிக வட்டிப் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பான தகவல்களை 8122223319 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கலாம். கந்து வட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம் முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள். அல்லது 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
<<17530837>>தொடர்ச்சி<<>>

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் நாளை(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 1000க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து ஆக.30 மற்றும் 31ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு தினத்தன்று, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்டத்தில் 11 இடங்களில் மதுக்கடைகளை மூடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.