India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரியின் மேற்கு கடற்கரை பகுதியில் குளச்சல் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன. படகுகளை நிறுத்த போதிய வசதி இல்லாததால் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 350 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குமரி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக குமரியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <

குமரி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தியில் – விநாயகர் சிலை ஊர்வலம் 30, 31 நடைபெற இருப்பதை ஒட்டி மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஊர்வலப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வடசேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் வாகனங்கள் புத்தேரி ரோடு அப்பா மார்க்கெட் வழியாக செல்ல வேண்டும். குமரி, அஞ்சு கிராமம் செல்லும் வாகனங்கள் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும்.

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை 04652-278404 அணுகவும். #SHARE

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான POWER GRID CORPORATION-ல் 1543 களப்பொறியாளர்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ, B.E., B.Tech கல்வித்தகுதி பெற்றிருத்தல் அவசியம். CBT மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு இந்த <

சென்னையில் மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் துறைச் செயலாளர் டி.கே.ராமசந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் உள்நாட்டு பகுதியில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவில் பயணிகள் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளது என்ற முக்கிய தகவலை தெரிவித்தார்.#SHARE

குமரி மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<

தீபாவளி பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இருந்து அக்டோபர் 15 முதல் நவம்பர் 26 வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 28 வரையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று(ஆக.28) அறிவித்துள்ளது.

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
#SHARE பண்ணுங்க நண்பர்களே…

நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான தேசிய தர நிர்ணய விருது மத்திய அரசால் கன்னியாகுமரி, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.