India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இன்று 92 டிகிரி வெப்ப சூழல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் பொதுமக்கள் குடை பிடித்து நடந்து செல்வதையே காண முடிகிறது. இதேபோல் மக்கள் அதிகமாக கூடும் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட், செம்மங்குடி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் பணம் வாங்கியவர்களை மிரட்டி அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் நிலையில், கந்து வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்ட மலையோர பகுதிகளான களியல், கடையால் சுற்று வட்டார பகுதிகளிலும் பெரும்பாலும் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரப்பர் பால் மற்றும் சீட்டின் விலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தற்போது இலையுதிர் காலமும் தொடங்கிவிட்டதால் ரப்பர் மரத்தில் உள்ள இலைகளும் உதிர்ந்து வருகின்றன. மேலும் ரப்பர் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று கூறியதாவது, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் சீல் வைக்கப்படும். சுகாதாரத்தை பேணிக்காக்க உணவகங்கள் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திறந்த நிலையில் தின்பண்டங்களை வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 405 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 77 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 788 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 412 கன அடி பெருஞ்சாணி அணைக்கு 87 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் உலக பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் தைப் பெருந்திருவிழா நேற்று(பிப்.4) இரண்டாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி அனந்த கிருஷ்ணன் பாமா ருக்மணி புஷ்பக விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
#இன்று(பிப்ரவரி 5) காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 62 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#மாலை 6 மணிக்கு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தை வழங்க கோரி நாகர்கோவில் உட்பட 6 இடங்களில் காத்திருப்பு போராட்டம் வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நடக்கிறது.
“குமரி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து வசதிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சேவைகள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன” என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தி வெளியிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கற்கால மனிதர்கள் தங்கள் கற்கருவிகளை கூர்த்திட்டுவதனால் ஏற்பட்ட பாறைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூதப்பாண்டி அருகே தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன், கள ஆய்வாளர் பைசல் ஆகியோர் கலள ஆய்வு மேற்கொண்ட போது 4000 ஆண்டுகளுக்கு முன் கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள் கூர்செய்யும் பல குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் அலுவலர் ஹரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் குழித்துறையில் காமராஜ் பவன் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதற்காக 16ஆம் தேதி காலை அவர் குமரி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.