Kanyakumari

News February 6, 2025

அஞ்சல் துறை சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி

image

குமரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், “அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடித எழுதும் போட்டி நடைபெறுகிறது; 9-15 வயதுக்குட்பட்டோர் இப்போட்டியில் பங்கேற்கலாம்; நீங்கள் கடல் என கற்பனை செய்துகொண்டு, கடலை பாதுகாக்க தேவையான முக்கியத்துவம் மற்றும் முறைகளை மற்றவர்களுக்கு விளக்கும் கடிதமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News February 6, 2025

குமரியில் 30 மசாஜ் சென்டர்கள் மூடல்!

image

நாகர்கோவிலில் மசாஜ் சென்டர்கள் பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்கள், இளைஞர்களை ஈடுபடுத்தி வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீசார் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி இயங்கி வரும் மசாஜ் அதிரடி சோதனை செய்து 30 மசாஜ் சென்டர்களை போலீசார் நேற்று மூடியுள்ளனர். இதேபோல் மார்த்தாண்டம் பகுதியிலும் மூடப்பட்டன.

News February 6, 2025

குமரி எம்.பி விஜய்வசந்த் கோரிக்கை

image

‘தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் இன்னல்கள்; தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனத்திற்கு வழங்கி வந்த மத்திய அரசின் நிதி குறைப்பு; பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவி வழங்காமல் இருப்பது; ஆகியன குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்’ என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

News February 6, 2025

முதல்வரை வரவேற்ற குமரி மேயர்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று(பிப்ரவரி 6) வருகை தந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் திமுகனவிர் பலர் கலந்துகொண்டனர்.

News February 6, 2025

பார்சல் சிறப்பு முகாமில் எந்தெந்த பொருள் அனுப்பலாம்!

image

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அஞ்சலக பார்சல் சிறப்பு முகாமில் நூல் தொழில் மற்றும் துணி பொருட்கள், மருத்துவ தயாரிப்புகள், மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப அஞ்சல் துறையின் பார்சல் சேவையை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

News February 6, 2025

குமரி: 100 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் அதிகரிக்கும்

image

வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்றின் வருகை காரணமாக குமரி மாவட்டத்தில் மேக கூட்டங்கள் இன்றி பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன்படி, குமரியில் இன்று(பிப்.6) அநேக இடங்களில் வெப்பநிலை 34°F முதல் 36°F வரை பதிவாகும். குறிப்பாக, திற்பரப்பு, அருமனை, பேச்சிப்பாறை, களியல், திருவட்டார் பகுதிகளில் 100 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

குமரியில் கோடை காலம் தொடங்கியது 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்ச அளவாக மேல் புறத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பேச்சி பாறை பகுதியில் 35 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 34 டிகிரி செல்சியஸ், நெய்யூர் 34 டிகிரி, திருப்பதி சாரம் 33 டிகிரி, நாகர்கோவில் 33 டிகிரி, கல்லார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 5, 2025

குமரியில் அஞ்சலக பார்சல் சிறப்பு முகாம் 

image

குமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க அஞ்சத்துறை பிப்ரவரி 1 முதல் 28 வரை பார்சல் சிறப்பு முகாம் நடத்துகிறது. இந்த முகாம் குமரி கோட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட வகை பார்சல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும்” என அதில் கூறியுள்ளார்.

News February 5, 2025

இந்திய விமானப்படை தளபதி குமரி வருகை

image

இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் சுரத் சிங் நாளை(பிப்.6) குமரி வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குமரி வரும் அவருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் குமரியில் உள்ளசுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

News February 5, 2025

குமரியில் குழந்தைகள் அறிவு திருவிழா

image

குமரியில் குழந்தைகள் அறிவு திருவிழா வருகிற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.இந்த விழாவில் ஓவிய போட்டி, மழலை பாடல் மற்றும் கதை சொல்லும் போட்டி, கற்பனை திறன் போட்டி, ஏபிசிடி வரிசைப்படுத்தும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.*உங்கள் பக்கத்து வீட்டு பெற்றோருக்கு பகிரவும்*

error: Content is protected !!