India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 14 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு களியக்காவிளை முதல் பம்மம் வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.பாதசாரிகள் பாதுகாப்பாக சாலை நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தொடர் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து, சமுதாயப் பொறுப்புடன் செயல்பட்டு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் முழு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறோம் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் வேல் முருகன் தூத்துக்குடி தொழிற்பூங்கா அல்லிக்குளம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைத் திட்ட தனித்துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட DSO சுப்புலட்சுமி தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ் விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறலை தடுக்கபோலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். லாயம் பகுதியில் போலீசார்மேற்கொண்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய இரண்டு கார் டிரைவர்களுக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று(பிப்.12) குமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அஞ்சு கிராமம் – வேளாங்கண்ணி குருசடி, பறக்கை – கீழ மணக்குடி, தடிகாரன் கோணம் – மறைமலைநகர், குமரி – அஞ்சு கிராமம், என்ஜிஓ காலனி – அன்னை நகர், அண்ணா பஸ் நிலையம் – அஞ்சு கிராமம் உட்பட 24 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அழகு மீனா நேற்று(பிப்.12) தெரிவித்துள்ளார்.
#இன்று(பிப்.13) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி 69வது நாளாக அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சீரிப்பாறையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு களியக்காவிளை பேருந்து நிலையத்தை கால தாமதமின்றி சீரமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிக்க விரும்புவர்கள் புதிய மினி பேருந்துக்கான விண்ணப்ப படிவத்தினை Pari Vahanமூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் 1600 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் இம் மாதம் 17ஆம் தேதி முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ் பி ஸ்டாலின் Iபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சாலைகளில் செல்லும்போது கனரக வாகனங்களில் 16 டயர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி இயக்கப்பட்ட 21 வாகனங்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு 241 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, (25 ஆங்கிலவார்த்தைகள்/ நிமிடம்) தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு ஆகியன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சேலம், நெல்லை, குமரி, திருச்சி, சென்னை, கோவை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.3.2025. <
Sorry, no posts matched your criteria.