Kanyakumari

News February 7, 2025

கன்னியாகுமரி எம்பி கோரிக்கை 

image

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவான தொகை ஆகும். 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகையை உயர்த்தி வழங்க நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

News February 7, 2025

குமரியில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நாளை(பிப்.8) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் செய்தல், மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் ஆகியவை பெறப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படும் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

News February 7, 2025

குமரியில் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.02.2025) கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, அலுவலக மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

News February 7, 2025

தமிழக முதல்வருடன் முன்னாள் அமைச்சர் சந்திப்பு

image

திருநெல்வேலியில் இன்று (பிப். 7) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திராவிட முன்னேற்ற கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் குமரி மாவட்ட முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News February 7, 2025

புனலூர் – குமரி பயணிகள் ரயில் பரவூரில் நின்று செல்லும்!

image

புனலூர் – கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்(56705/56706), சோதனை முறையில் பரவூர் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து பிப்ரவரி 8 முதல் புறப்படும் சேவைகள் மற்றும் புனலூரில் இருந்து பிப்ரவரி 9 முதல் புறப்படும் சேவைகள் பரவூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

கடிதம் எழுதும் போட்டி: மார்ச் 15 கடைசி நாள்

image

தபால் துறை சார்பில் சர்வதேச அளவில் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் 9 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். போட்டியின் தலைப்பு ‘கடலை பாதுகாக்கும் முறை மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கம் கடிதம்’. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மார்ச் 15-க்குள் நாகர்கோவில் தபால் துறை கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

கோணத்தில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

image

நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்.10ஆம் தேதி பிரதம அமைச்சரின் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் PMNAM(Pradhan Mantri National Apprenticeship Mela) நடைபெற உள்ளது. மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஐடிஐ பயின்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT.

News February 7, 2025

போலீசில் மனு கொடுப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

image

குமரி எஸ்பியாக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட காவல் அலுவலகத்திலும், எஸ்பி-யிடமும் மனு கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் ஸடாலினின் துரித நடவடிக்கையால் காவல்துறை மீதான நம்பிக்கை அதிகரித்து, மனு கொடுப்போர் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து?

News February 7, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.7) காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவம் நியமிக்க கேட்டு ரப்பர் கழக தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 64வது நாளாக உண்ணாவிரதம்.#மாலை 4 மணிக்கு பார்வதிபுரம் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க கேட்டு பாக்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.30 மணிக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி CPS இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம.

News February 7, 2025

மோசடியில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள்!

image

வங்கிசாரா நிதி நிறுவன(Non-Banking Financial Institutions) மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு பதிவு ஒன்றை யாகுமரி மாவட்ட காவல்துறை தனது ‘X’ பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. http://rbi.org.in/commanman/english/scripts/NBSÇ’S.aspx என்ற வலைதளத்தில் மேலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மோசடியில் சிக்காமல் பாதுகாப்பக இருக்குமாறும் அறிவிறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!