India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி, உங்களுடன் ஸ்டாலின் முகாம் (செப்டம்பர் 4) 2025 வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகள் 17,21 மற்றும் குடித்துறை நகர் வார்டுகள் 3,4,5,6 உட்பட பல பகுதிகளில் நடைபெறும் இம்முகாமில் குடிமக்களின் குறைகள் கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்கப்படும். அரசு அதிகாரிகள் நேரடியாக பங்கேற்க உள்ளனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி,தியாகராஜன், ஜெசி ஜெனட், ஹெலன் மேரி,சுகந்தி,மேரி அழகம்மாள்,சுரேந்திரன்,ஸ்ரீதேவி,பிரேமா ராஜ்,லீமா ரோஸ்,சரிகா, காட்வின் ஆகிய 12 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *ஷேர் பண்ணுங்க

நாகர்கோவில் இருந்து கோட்டயம் செல்லும் கடைகளுக்கு ஒச்சிறையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இன்று முதல் இந்த ரெயில் ஓச்சிறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 6.07 மணிக்கு ஓச்சிறை வரும் ரயில் 6.08 மணிக்கு ஓச்சிடையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

குமரி மாவட்டத்தில் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (செப்.5) டாஸ்மாக் கடைகள் செயல்படாது. அதாவது அன்று மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனை மதுக்கடைகள் எப்.எல்1, எப்.எல்2, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏ.ஏ உரிமம் பெற்ற மதுக்கடைகள் மூடப்படும் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 3ம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அழகப்பபுரம் , பத்மநாதபுரம் , வேர் கிளம்பி , மேல்புறம் அகஸ்தீஸ்வரம் ,முஞ்சிறை உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மக்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து அரசின் நலத்திட்டங்களைப் பெறலாம்.

ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு ஆற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான விருது திருவள்ளுவர் நாளன்று வழங்கப்பட உள்ளது. அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றி முழு விபரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை வருகிற 30ம் தேதிக்குள் மாவட்ட ஆதி திராவிடர் நலஅலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அதன் விலை தற்போது எட்டாத உயரத்தில் உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு கன்னியாகுமரி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <

கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள 13 மாமரம், 1 நெல்லி மரம், 2 பலாமரம் என அரசுக்கு சொந்தமான பலன் தரும் 16 மரங்கள் உள்ளன. இவை 1 ஆண்டுக்கு அனுபவ பாட்டம் பெற செப்.4 அன்று காலை 10 மணிக்கு ஆயுதப்படை முகாமில் வைத்து பகிரங்க ஏலம் விடப்படுகிறது. இதில் ரூ.500 முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட எஸ்.பி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.