Kanyakumari

News February 14, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.14) காலை 11 மணிக்கு கன்னியாகுமரி வணிக நிறுவனங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி கன்னியாகுமரி ரவுண்டானா தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.30 மணிக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் கல்குளம் விளவங்கோடு ஆகிய இடங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 14, 2025

கன்னியாகுமரி: தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை!

image

அஞ்சல் துறையில் <>வேலைவாய்ப்பு அறிவிப்பு<<>> வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 14, 2025

“DRUG FREE TN” டவுன்லோட் செய்யுங்கள் குமரி மக்களே!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு “DRUG FREE TN” என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள்.
என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 14 மற்றும் 15 அன்று சுங்கான்கடை புனித சேவியர் பவறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

குமரியில் சுட்டெரிக்கும் வெயில்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது வருகிறது.
இதனால் வாகன ஒட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட அளவில் சமவெளியில் மாவட்டத்திலே மிகவும் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று (பிப். 13) பேச்சிப்பாறையில் 37°C, 99F என்ற அளவில் வெயில் சுட்டெரித்தது.

News February 13, 2025

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் வேண்டுகோள்

image

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 14 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு களியக்காவிளை முதல் பம்மம் வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.பாதசாரிகள் பாதுகாப்பாக சாலை நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 13, 2025

காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : எஸ்பி 

image

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தொடர் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து, சமுதாயப் பொறுப்புடன் செயல்பட்டு, விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எடுக்கும் முழு முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்கிறோம் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

குமரியில் மூன்று அதிகாரிகள் இடமாற்றம்

image

குமரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் வேல் முருகன் தூத்துக்குடி தொழிற்பூங்கா அல்லிக்குளம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைத் திட்ட தனித்துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட DSO சுப்புலட்சுமி தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ் விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News February 13, 2025

போக்குவரத்து விதிமுறை மீறல் இரண்டு நாட்களில் 417 வழக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறை மீறலை தடுக்கபோலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். லாயம் பகுதியில் போலீசார்மேற்கொண்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய இரண்டு கார் டிரைவர்களுக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News February 13, 2025

அமைச்சர் கீதா ஜீவன் இன்று குமரி வருகை

image

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று(பிப்.12) குமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

error: Content is protected !!