Kanyakumari

News September 9, 2025

குழித்துறையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செப்.11 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, கிள்ளியூர், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

News September 9, 2025

குமரி: பயணிகள் அச்சப்படத் தேவையில்லை – ஆட்சியர்

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

கண்ணாடி பாலத்தில் கண்ணாடியில் விரிசல் எப்படி?

image

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் ஒன்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சுத்தியல் ஒன்று கண்ணாடியில் விழுந்ததில் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சுத்தியல் விழுந்து உடையும் அளவில் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

News September 8, 2025

குமரி ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட 265 மனுக்கள்

image

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை ஒட்டி மனுநீதி நாளில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் மனுக்களை கொடுத்தனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட 265 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.

News September 8, 2025

குமரி: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

image

குமரி மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

குமரியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

image

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

நாகர்கோவில்: அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம்

image

அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.16 அன்று 11. மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

குமரியில் பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

image

குமரி மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அசம்பு, மாறாமலை, காணிப் பெட்டி, மகேந்திரகிரி மலை பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் கடற்கரை உட்பட மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என தெரிவித்துள்ளது.

News September 8, 2025

குமரியில்: குவியும் வேலைவாய்புகள் APPLY NOW!

image

குமரி மக்களே,

▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login

▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php

▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/

▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/

▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/

மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 8, 2025

குமரியில் நகை திருடிய பெண்கள் கைது

image

தம்மத்துக்கோணம் Dr.பகவத்தின் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லாததால், இவரை உண்ணாமலைகடை சுசீலா பராமரித்து வந்தார். செப்.6 ஆம் தேதி சுசீலா வீட்டுக்கு சென்ற பின்பு Dr. மாமியாரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. சுசீலா நகையை திருடியிருப்பார் என்ற சந்தேகத்தில் அளித்த புகாரின்படி ராஜாக்கமங்கலம் போலீசார் சுசீலா, நகையை மறைத்து வைத்திருந்த அவரது தங்கை சாந்தியை கைது செய்து நகையை மீட்டனர்.

error: Content is protected !!