India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா வரும் மார்ச் 2ஆம் தேதி காலை 7.21 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி, சந்தனக் குட ஊர்வலம் போன்றவைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
#இன்று(பிப்.22) காலை 10 மணிக்கு ஒழுகினசேரி பெரியார் மையத்தில் திராவிடர் கழக ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள SC,ST(POA) Act 1989 Trial Hall-ஐ சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைக்கிறார்.#மாலை 5.30 மணிக்கு எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் 6வது புத்தகக் கண்காட்சி நடக்கிறது.
நாகர்கோவிலில் இன்று(பிப்.22) நடைபெறவுள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராம் கார் மூலம் இன்று காலை குமரி வந்தார். அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த தலைமை நீதிபதி ஸ்ரீராமுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட நீதிபதிகள் பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 2 மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த திங்கள்சந்தை – மாங்குழி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆதிகா வீட்டிற்கு குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று(பிப்.21) நேரில் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று பத்மநாபபுரம் பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்கள் இதே பகுதியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்திய ரயில்வேயில் ஏழை எளிய மக்கள் முன்பதிவில்லாத பெட்டிகளில் அதிகமாக பயணம் செய்கிறார்கள்; எனவே அந்த வகை பெட்டிகளின் எண்ணிக்கையை கூட்டுவது விட்டுவிட்டு குறைக்கும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது; சாதாரண மக்கள் அதிகம் நம்பும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது’ என இன்று (பிப் – 21) விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி முன்னிட்டு இம்மாதம் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும், அடுத்த மாதம் 4 தேதி சாமிதோப்பு வைகுண்ட சாமி பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளதுஃ இதை போல் அடுத்த மாதம் 11-ம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. *எல்லோருக்கும் பகிருங்கள் மக்களே*
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த குமரி தனியார் கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.21) தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 100 பேருக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் முடிப்பு வழங்க உள்ளது. இந்த விருது பெற, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குமரி கலெக்டர் நேற்று(பிப்.20) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
#இன்று(பிப்.21) பகல் 1.15 மணிக்கு தனியார்மயத்தை கைவிடக் கோரி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ் ஆர் எம் யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது#மாலை 5 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தென் மண்டல மாநாடு இளங்கடையில் நடக்கிறது.#மாலை 5.30 மணிக்கு போதுமான பணியாளர்களை நியமனம் செய்யக்கோரி வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.