India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோவில்களை இணைத்து சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. முன் சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த சிவாலய ஓட்டம் தீக்குறிச்சி, திற்பரப்பு திருநந்திக்கரை, பொன்மனை, பண்ணிப் பாகம், கல்குளம், திருமேலாங்கோடு திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்ணிக்கோடு வழியாக நட்டாரத்தில் முடிவடைகிறது.
#இன்று(பிப்.24) காலை 10 மணிக்கு குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் வசதி செய்யக்கோரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கோணம் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவ பக்தர்கள் 12 கோவில்களுக்கு 110 கி.மீட்டர் தூரம் ஓடிச்சென்று சிவபெருமானை வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்சிறை சிவன் கோவிலில் இருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாரத்தில் முடிவடைகிறது. சிவ பக்தர்கள் இந்த கோவில்களுக்கு கையில் விசிறி கொண்டு வீசியபடி கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்வர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் பகல் நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ,(AWS, IMD,TAWN , PWS) station report; நாகர்கோவில்-38°C,பத்மநாபபுரம்-36°C,பேச்சிபாறை-35°C,கன்னியாகுமரி-34°C,மேல்புறம்-34°C,குழித்துறை-33°C,கிள்ளியூர்-32°C,நெய்யூர்-31°C என்னும் அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
செம்பருத்திவிளையை சேர்ந்தவர் ஜான் ரோஸ். இவர் செம்பருத்திவிளையில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற சிறுமியை ஜான் ரோஸ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் ஜான்ரோஸ் அவரது மனைவி ஜெலின் பிரபா, அவரது மகன் பிரதீப் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; மினி பஸ்களுக்கான புதிய விரிவான திட்டம் 2024ன்படி புதிய வழித்த டங்கள் கண்டறியப்பட்டும்,புதிய மற்றும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகளுக்கு புலம்பெயர்தல் தொடர்பான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்.28ம் தேதி கடைசி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைக்கவசம் அணியாது இருத்தல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உட்பட மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த 1-ந் தேதி முதல் 21 தேதி வரை 11 ஆயிரத்து 157 பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளது.
குமரி மாவட்ட காவல் மானியவிலை பல்பொருள் அங்காடியில் பணிபுரிய விருப்பமுள்ள பணியிலிருக்கும்/ஓய்வு பெற்ற காவலரின் குடும்ப அங்கத்தினர் (துணையருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது)ஒரு நபர் மட்டும் ரூ15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) மாதம் ஒன்றிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 25.02.2025-க்குள் மாவட்ட காவல் அலுவலக G”பிரிவில் விண்ணப்பம் செய்யலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குமரி, காந்தி மண்டபம் அருகே நேற்று நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 2 பேர் திருடிச் சென்றனர். இதை கண்ட மக்கள் அவர்களை விரட்டினர். குண்டல் என்ற பகுதிக்கு சென்றபோது, பைக்கில் பெட்ரோல் தீர்ந்ததால் அங்கே நிறுத்திவிட்டு, திருடர்கள் பெட்ரோல் வாங்கி வந்தனர். அங்கு காத்திருந்த மக்கள், இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, குமரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்
இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.