Kanyakumari

News February 26, 2025

குமரியில் 2 இடங்களில் விடைத்தாள்கள் திருத்தும் மையம்

image

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள்கள் திருத்தும் மையமாக நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் கருங்கல் பெத்தலகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிய முடிய விடைத்தாள்கள் பாதுகாப்புடன் இம்மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 26, 2025

அமித்ஷாவை வரவேற்ற பொன்.ராதாகிருஷ்ணன்

image

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.25) வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அவருடன் பலர் கலந்து கொண்டனர்.

News February 26, 2025

சிறப்பு பூஜையுடன் தொடங்கிய சிவாலய ஓட்டம்

image

முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு நேற்று(பிப்.25) சிவாயல ஓட்டம் தொடங்கியது.
குமரி அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், சிறப்பு பூஜையுடன் விழா ஆரம்பித்தது.
முன்சிறை திருமலை மகாதேவர் கோயில் தொடங்கி திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் வரை 12 சிவாலயங்களுக்கும் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் ஓடிச்சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.

News February 26, 2025

குமரியின் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம்!

image

12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடி தரிசிக்கும் சிவாலய ஓட்டம் குமரியில் புகழ்பெற்றது. 12 கோயில்களில் உள்ள சிவனை உரிய நேரத்தில் தரிசிக்கவே இந்த ஓட்டம். ‘ஹரியும் ஹரனும்’ ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்த கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடலே சிவலாய ஓட்டம் வரக் காரணமானது. சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை முன்சிறையில் தொடங்கும் ஓட்டம் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் 110 கி.மீ. கடந்து சுசீந்திரத்தில் நிறைவடைகிறது.

News February 25, 2025

டாரஸ் லாரிகளுக்கு இரண்டு நாட்கள் தடை!

image

குமரி மாவட்டத்தில் பிப்ரவரி-25, 26 சிவாலய ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க அந்த இரண்டு நாட்கள் குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் பிப்ரவரி-25, 26 டாரஸ் லாரிகள் ஓடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

News February 25, 2025

குமரியில் கனரக வாகனங்களுக்கு தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும் இரண்டு நாட்களும் (பிப். 25,26) களரக வாகனங்களுக்கு தடை கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி இடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவாலய ஓட்டம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர் இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

அனைத்து நாட்களிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்

image

கடந்தாண்டு அக்.31ஆம் தேதிக்குள் வரி செலுத்த தவறியவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சொத்து வரியுடன் ஒரு சதவீதம் வட்டி தொகை மாதந்தோறும் வசூலிக்கப்படும். அனைத்து வரிகளையும் செலுத்த மார்ச்.31ஆம் தேதி வரை அவகாசம். கணினி வரி வசூல் மையங்கள் அனைத்து நாட்களிலும் செயல்படும் என்றும் நாகர்கோவில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையினை உடனடியாக செலுத்தும் படி மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. *ஷேர்

News February 25, 2025

குமரியில் திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்து

image

தவக்காலத்தை யொட்டி குமரியில் உள்ள புகழ்பெற்ற கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, ராஜாவூர் உள்பட 17 கிறித்துவ திருத்தலங்களுக்கு திருப்பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 5-ந்தேதி முதல் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் தினமும் காலை 6-30 மணிக்கு வடசேரியில் இருந்து புறப்பட்டு மீனாட்சிபுரம் வழியாக சென்று இரவு 7-15 மணிக்கு குளச்சல் புதூர் திருத்தலத்தை சென்றடைகிறது.

News February 25, 2025

கன்னியாகுமரியில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நடப்பாண்டுக்கான முதல் கோடை மழை பிப்.28 அன்று தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிப்.28 முதல் மார்ச்.2 வரை 3 நாட்களுக்கு நெல்லை, விருதுநகர், குமரி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

மாதா அமிர்தானந்த மயி தேவி குமரிக்கு வருகை!

image

குமரி மாவட்டம் சேவாபாரதி அமைப்பு சார்பாக “கர்மயோகினி சங்கமம்” நிகழ்ச்சி நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் அமைந்துள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச்-2 நடைபெற உள்ளது. இந்த கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்குரு மாதா அமிர்தானந்த மயி தேவி ஆசியுரை வழங்க உள்ளார்.

error: Content is protected !!