Kanyakumari

News March 5, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

image

கன்னியாகுமரி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில், பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரியில் இருந்து இம்மாதம் 12 மற்றும் 14ஆம் தேதிகளில் புறப்படும் ரயில் சென்னை கடற்கரை, பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.என்று தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 4, 2025

பத்திரிகை நிரூபர்கள் எனக்கூறி பணம் பறித்தால் நடவடிக்கை!

image

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவன அதிபரை மிரட்டி பத்திரிகை நிரூபர்கள் என்று கூறி பணம் பறித்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News March 4, 2025

குமரி: 4 ஆண்டுகளில் 10 யானை, 2 புலிகள் உயிரிழப்பு

image

இன்று உலக வன விலங்குகள் தினம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புலிகள் மற்றும் யானைகள் சரணாலயம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 யானைகள் மற்றும் 2 புலிகள், 1 சிறுத்தை மரணம் அடைந்துள்ளது. இவைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 4, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.27 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 24.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 3.54 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 3.64 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 245 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 51 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 4, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 85வது நாளாக கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி கோட்ட அரசு பணிமனைகளில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நடத்துநர் நியமனம் செய்வதை கண்டித்து செட்டிகுளம் ராணி தோட்டம் TNSTC பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 4, 2025

குமரியில் 684 மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு நேற்று(மார்ச் 3) தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 85 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. மொத்தம் 22,461 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 21,777 மாணவ மாணவிகள் மட்டுமே நேற்று நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டனர். 684 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அவர்கள் ஏன் தேர்வு எழுத வரவில்லை என்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 3, 2025

குமரி பெண்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

image

பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 5ம் தேதி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு முன்னனி நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கின்றனர். குறிப்பாக TATA பவர் நிறுவனம் 50-60 நபர்களை எடுக்கின்றனர். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து)<<>> என்ற பதிவுசெய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். *தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*

News March 3, 2025

வனத்துறை சோதனைச் சாவடியில் இறந்து கிடந்த வனக்காப்பாளர்

image

கடையால் மூடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். குலசேகரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை வேறு ஒருவர் பணிக்கு சோதனை சாவடிக்கு வந்த போது சோதனை சாவடி திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் உடலில் காயங்களுடன் செல்லப்பன் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரில் குலசேகரம் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2025

மண்டைக்காடு கடற்கரையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

image

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கு வரும் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் கடற்கரைக்கு செல்வது வழக்கம். சிலர் கால்நனைத்து விட்டும், சிலர் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வர். இதனை ஒட்டி கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகளை போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

News March 3, 2025

கடின உழைப்பு, வெற்றியாக மாற வாழ்த்துகிறேன்: விஜய் வசந்த்

image

தமிழ்நாட்டில் இன்று முதல் +2 தேர்வு நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று தொடங்கும் பொதுத்தேர்வு எழுத தயாராக உள்ள மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பு, வெற்றியாக மாற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!