India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இருதிசை காற்று முறிவு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். குறிப்பாக ஒருநூறாம்வயல், கல்லார், ஆறுகாணி ,பத்துகாணி, மணலோடை ஆகிய மலையோர அடிவார பகுதிகளிலும் நாளை பிற்பகலுக்கு பிறகு மாலை நேரத்தில் உருவாகி மழை பொழியும் வாய்ப்பு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பத்மநாபப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் சப் கலெக்டர் தலைமையில் 18. ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ” x ” பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; மேலும் ஏஜென்ட்கள் குறித்து சந்தேகம் இருப்பின் 7010363178 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து விழிப்படைய செய்யுங்கள்*
நாகர்கோவில் போக்குவரத்து கழக மண்டலம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்,“குமரி மாவட்ட மக்கள் ₹ 1000 செலுத்தி ( குளிர்சாதன வசதி தவிர ) ஒரு மாதத்திற்கு மாவட்டம் முழுவதிலும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்; இந்த பயண சீட்டை வடசேரி, நாகர்கோவில், திங்கள் சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பேருந்துநிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்*
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று(மார்ச் 5) பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அவர்கள் நாகராஜருக்கு மஞ்சள் பொடி தூவி, பால் ஊற்றி வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
குமரியில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் (94983 83075, 94983 83076) அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த செய்தி மூலம் பிறரும் பயன்பெற *ஷேர் செய்யுங்கள்.
நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் குமரியில் நேற்று(மார்ச் 4) தொடங்கியது. காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் குத்துவிளக்கு ஏற்றி முகமை தொடங்கி வைத்தார். கவுன்சிலின் பொறுப்பு, கடமைகள் மற்றும் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் ராஜா மணி, மகாதேவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
#இன்று(மார்ச் 5) காலை 10 மணிக்கு ஆசாரிப்பள்ளம் தாமரை குளத்தை தூர்வாரக் கோரி நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.#மாலை 4 மணிக்கு மீனவர்களை மீட்க குமரியில் வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.20 மணிக்கு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பார்வதிபுரம் TNEB SE அலுவலகம் முன்பு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் 193ஆம் பிறந்தநாள்! எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!
Sorry, no posts matched your criteria.