India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், கோரிக்கைகளை கேட்டறியும் விதமாகவும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. ஆரல்வாய்மொழி தொடங்கி தடிக்காரன்கோணம் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களும் பக்தர்களும் வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், புற நோயாளிகள் பிரிவு ஒன்று தற்காலிகமாக மருத்துவ அலுவலர்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று உத்தரவிட்டார்.
காற்று சுழற்ச்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.28) தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 13 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் – கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் கோ. ராமகிருஷ்ணன் இடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பலர் கலந்து கொண்டனர்.
திருவிதாங்கூர் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபக தலைவரான தோழர் பி கிருஷ்ண பிள்ளை வாழ்க்கை வரலாறு தமிழில் வீர வணக்கம் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவருகிறது. தலைமறைவு காலத்தில் பாம்பு கடித்து மரணமடைந்த கிருஷ்ண பிள்ளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடக்குமுறைக்கு எதிராக களம் கண்டவர். குமரி மாவட்டம் இடலாகுடியில் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மேனகா. இவரது தாய் நமது குமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சியை சார்ந்தவர். பிறந்ததும் குமரியே. இவரது மகள் தான் தற்போது இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் உச்சம் தொட்டு, தற்போது பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த கீர்த்தி நம்ம ஊரு என்பதில் நமக்கு சந்தோசம் தானே மக்களே! *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க
குமரியில் கன்னிப்பு கும்ப பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் உள்ளனர். அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் நாளை (பிப்.28) மூடப்படுகிறது. மேலும் அணைகளை மூட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அணை திறப்பை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று(27ம் தேதி) வரை விடிய விடிய பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். இந்த சிவாலய ஓட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், குமரி மாவட்ட குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். விவசாய தேவைகளுக்காக ஓர் ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 73 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
வாரத்தில் 3 நாள் இயங்கும் தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயிலில் ஜூன் மாதம் 19ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த ராயல் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.