Kanyakumari

News March 7, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 7) காலை 10 மணிக்கு பணியாளர்களுக்கு ரூ.730 தினக்கூலி வழங்க கேட்டு குளச்சல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்.#மாலை 5 மணிக்கு பூதப்பாண்டி உதவி ஆய்வாளரை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பூதப்பாண்டி ஜீவா திடலில் ஆர்ப்பாட்டம்.#மாலை 5.30 மணிக்கு வங்கியில் போதுமான பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி நாகர்கோவில் ஐஓபி வங்கி முன்பு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News March 7, 2025

குமரி TO மும்பை சிறப்பு ரயில் ஜூன் வரை நீடிப்பு!

image

மும்பையில் இருந்து குமரிக்கும், குமரியில் இருந்து மும்பைக்கும் வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மும்பையில் இருந்து திங்கள் & புதன்கிழமையும், கன்னியாகுமரியில் இருந்து வியாழன் & சனிக்கிழமையும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் சேவை ஜூன் மாதம் இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 6, 2025

குமரி நீலகண்ட சாமி கோவில் தலபுராணம்

image

பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் 12 சிவாலயங்களில் 7வது சிவாலயம் ஆகும். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது, தறி கேட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைப்பட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டு, அங்கு கோவில் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. 2 கொடி மரங்கள் இந்த கோவிலில் உள்ளன.

News March 6, 2025

விவேகானந்தர் பாறைக்கு செல்ல 3 புதிய படகுகள் -அமைச்சர் 

image

குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது அங்கு 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நேற்று சென்னையில் தெரிவித்தார்.

News March 6, 2025

குமரி மாவட்டத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண்

image

குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மூன்று பேருந்துகளின் படங்களுடன் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய பேருந்துகள் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளுக்கு பழைய பேருந்துகளின் எண்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. *இது குறித்த உங்கள் கருத்தை ஜாலியா கமெண்ட்ல சொல்லுங்க*

News March 6, 2025

தேசிய அளவில் குமரி மாணவிகள் சாதனை!

image

கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் குழு படகு ஓட்டுதல் போட்டியில்(Asmita rowing league) வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News March 6, 2025

குமரியில் 263 மாணவர்கள் +1 தேர்வு எழுதவில்லை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று +1 தேர்வு தொடங்கியது. 22 ஆயிரத்து 15 மாணவ மாணவிகள் தேர்வு எழுத பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு விபரங்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 22 ஆயிரத்து 38 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுதினர். 263 தேர்வு எழுதவில்லை. அவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 6, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 5) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தையல் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பணம் பலன்களை உயர்த்தி வழங்க கேட்டு தையல் கலைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு மணலோடை அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்க கேட்டு மணலோடை ரப்பர் கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 6, 2025

‘மும்மொழி கல்வி எங்கள் உரிமை’ கையெழுத்திட்ட Ex. MP

image

தமிழகம் முழுவதும், மும்மொழிக் கொள்கைக்கு பொதுமக்களிடையே இருக்கும் ஆதரவைத் திமுக அரசுக்கு உணர்த்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சென்னையில் நேற்று(மார்ச் 5) ‘மும்மொழி கல்வி எங்கள் உரிமை’ எனும் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கையெழுத்திட்டார்.

News March 6, 2025

நாகர்கோவில் ரயிலில் வந்த உதவி லோகோ பைலட் உயிரிழப்பு

image

திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று(மார்ச் 5) இரவு 11.50 மணிக்கு வந்தது. இந்த ரயில் பயணிகளை இறக்கி விட்டு சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தபோது, அந்த ரயிலில் இருந்த உதவி லோகோ பைலட் பிரதீப் மயங்கிய விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்து போனார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!