Kanyakumari

News September 22, 2025

குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 22, 2025

குமரி: முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

image

கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் தியாக ராஜன்(75). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று (செப்.21) மாலையில் அவரது மனைவி வீட்டிற்குள் இருந்தார். அப்போது வீட்டின் அருகில் நின்ற மரத்தில் தியாகராஜன் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் தியாகராஜனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

News September 22, 2025

குமரி: மாணவி தற்கொலை – வெளியான முதற்கட்ட தகவல்

image

இரணியல் பகுதியை சேர்ந்த ஞான செல்வன் மகள் அஸ்வினி (19). இவர் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரனையில், அஸ்வினி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு ரத்தத்தை பார்த்தால் அலர்ஜி இருந்துள்ளது. இதனால் நாகர்கோவிலில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

News September 22, 2025

குமரி: பட்டாவில் திருத்தமா?

image

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News September 22, 2025

குமரி: சிறுமி பாலியல் தொல்லை – ஆசிரியை தாய் மீது போக்சோ

image

இரணியல் பகுதியை சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூசன் ஆசிரியை தாயார் (43) மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தினங்களுக்கு முன் சிறுமி சோர்வாக காணப்பட்டதை அடுத்து சிறுமி தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமி தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News September 22, 2025

குமரியில் இரண்டரை ஆண்டுகளில் 1436 பேர் தற்கொலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்த 2023ம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஜூன் மாதம் வரையிலும் இரண்டரை ஆண்டுகளில் 1436 பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இவர்களில் ஆண்கள் 1140 அவர்.இது 79 புள்ளி 4 சதவீதம் ஆகும் பெண்கள் 296 பேர் தற்கொலை செய்துள்ளனர் இது 20.6 சதவீதம் ஆகும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் தற்கொலை செய்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News September 22, 2025

600 வகை மூலிகைகளைக் கொண்ட மருந்துவாழ் மலை

image

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் 640 ஏக்கர் பரப்பளவையும், 1,200 அடி முதல் 1800 அடி உயரத்தையும் கொண்டுள்ள மருந்துவாழ் மலையில் 600-க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன. இதனால் அதற்கு மருந்துவாழ் மலை என பெயர் வந்துள்ளது. இந்த மலை அனுமன் தூக்கிச்சென்ற சஞ்சீவி மலையில் இருந்து கீழே விழுந்த சிறு துண்டு தான் என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மலையில் பல்வேறு ஆசிரமங்களும் உள்ளன.

News September 21, 2025

குமரி: இலவச தையல் மிஷின்.! APPLY பண்ணுங்க!

image

குமரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க

News September 21, 2025

குமரி மக்களே., இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

image

இன்று புரட்டாசி மாத அமாவாசையில் செய்ய வேண்டியவை
->அதிகாலையில் குளித்து முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
->இன்று விரதம் இருப்பதால் முன்னோர்களின் ஆசி முழுதாக கிட்டும்.
-> பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்யலாம்.
-> இச்செயல்களால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.
இதனை எல்லோரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News September 21, 2025

குமரி: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

image

குமரி மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!