India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வரை கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்தில் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்கள் என மொத்தம் 97 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 43 பேர் தற்கொலை செய்தவர்கள் .மீதம் உள்ளவர்கள் கவனக்குறைவால் ரயில் மோதி உயிரிழந்தவர்கள் என்று ரயில்வே காவல்துறையினர் நேற்று தெரிவித்தனர்.

குமரி மக்களே உங்க பகுதி-ல உள்ள குடிநீர் சரிவர வரலை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா?? தென்காசி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போன்ல (0462-2540596) தெரிவியுங்க….உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். மற்றவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தீர இதை SHARE பண்ணுங்க.

குமரி ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், புதுமை தொழில் தொடங்க ஒரு அலகிற்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும். ஏற்கெனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த ஒரு அலகிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே புதுமை தொழில் (Agri Start-up) புதிதாக தொடங்க விரும்புவோர் இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும் அறிய வேளாண்மை இணை இயக்குனரை அணுகலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கனிம வளம் கடத்தல் சம்பந்தமாக 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது.320 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் 180 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த லாரிகளை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று திற்பரப்பு அருவியில் கேரள மாநிலம் கொல்லம் பெரும்புழாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் 17 வயது சிறுமியிடம் கோவில்பட்டி சாஸ்திரி நகர் வங்கி ஊழியர் மாரி செல்வம் (32) பாலியல் தொல்லை அளித்ததால் அருகில் நின்றவர்கள் அவரை அடித்து உதைத்து அருமனை போலீசில் ஒப்படைத்தனர். பின் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் மாரி செல்வத்தை கைது செய்தனர்.

குமரி மாவட்ட வன அலுவலர் அன்பு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வது தொடர்பான பிரச்சனையில் தடிகாரன் கோணம் சோதனை சாவடியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக வன ஊழியர்கள் 2 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 7 நாட்களில் அவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

குமரி மக்களே, உங்கள் வீட்டில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருந்தா? பால் ஆதார் எடுக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவ தேவையின் போது ஆதார் அவசியமான ஓன்றாகும். இதற்காக நீங்க அலையாம வாங்க எளிய வழி இருக்கு. இங்<

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் நேற்று ஏராளமானவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவரிடம் மாரி செல்வம் (வயது 32) என்பவர் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் மாரி செல்வத்தை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 11.10.2025 அன்று காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டின் வரவு செலவு தொடர்பான தணிக்கை குறித்தும் விவாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல் விதைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் இரண்டாவது பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். விதை நாள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.