Kanyakumari

News March 17, 2025

அரசுப் பள்ளிக்கு நிதி உதவி: குமரி கலெக்டர் அறிவுறுத்தல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 16) வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, குமரியில் அரசு பள்ளிகளின் மேம்பாடு மற்றும் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவிடும் வகையில் ‘நம்ம ஊரு நம்ம ஸ்கூல்’ குழுவை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

குமரியில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

image

தமிழகத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று(மார்ச் 17) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 17, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 9 மணிக்கு அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 96வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தேசிய ஊரகத் தொழிலாளர்களுக்கான ஐந்து மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

News March 17, 2025

சட்ட விரோதமாக பணியாற்றிய வங்கதேசத்தவர் கைது

image

குமரி அருகே இடைக்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்த சித்திக்(32 ) என்ற இளைஞர் போலி ஆவணங்களுடன் சட்ட விரோதமாக பணிபுரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவரிடம் இருந்த ஆவணத்தில் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.

News March 16, 2025

குமரியில் வேலை வாய்ப்பு முகாம்!

image

வசந்த் அண்ட் கோ சார்பில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இளைஞர்கள் இதில் ஏராளமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என வசந்த் அண்ட் கோ தலைவர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 16, 2025

நாகர்கோவில் வருகிறார் நடிகர் வடிவேலு!

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகில் வருமான வரித்துறை அலுவலகத்தில் மார்ச் 19ஆம் தேதி வருமான வரி சேவை மையம் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் திரைப்பட நடிகர் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டு திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருமான வரி உதவி ஆணையர் வேணுகுமார் தலைமையில் வருமான வரி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.*வடிவேலு ரசிகர்களுக்கு பகிரவும்*

News March 16, 2025

குமரி மாவட்டத்திற்கு வந்தடைந்த புதிய பேருந்துகள்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திற்கு இந்த ஆண்டு 77 புதிய டவுன் பேருந்துகளும், 9 புதிய மப்சல் பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 19 பேருந்துகள் குமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளன. இந்த புதிய பேருந்துகளை எந்தெந்த பகுதிகளில் இயக்குவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 16, 2025

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு மற்றும் நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் இணைந்து பங்களிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News March 16, 2025

கொச்சுவேலி ரயில் நேரம் மாற்றம் – பயணிகள் மகிழ்ச்சி

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து திருவனந்தபுரம் கொச்சுவேலி செல்லும் பயணிகள் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 8:10 மணிக்கு கிளம்பி வந்த ரயில் நேற்று முதல் 7:55 மணிக்கு கிளம்பி திருவனந்தபுரம் 10:25க்கு சென்றடைகிறது. இதனால் திருவனந்தபுரத்திற்கு பல்வேறு பணிகளுக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 16, 2025

குமரி மாவட்டத்தில் 2வது கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி

image

குமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் தேதி நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. உத்திர பாஞ்சான், தெற்கு மலை உதயகிரி கோட்டை மருந்து வாழ் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!