Kanyakumari

News March 22, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 22) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு 101 வது நாளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ள விளை சந்திப்பில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 21, 2025

குமரியில் 700 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 700 குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அரசுகளில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீரை பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

News March 21, 2025

குமரி எரிவாயு நுகர்வோருக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 21, 2025

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குமரி வருகை

image

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை மார்ச்27-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் அகில பாரத கோ சேவாபவுண்டேஷன் சார்பில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும் பசு பாதுகாப்பு மகா யாத்திரையின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இதை யொட்டி அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

News March 21, 2025

கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். SHARE IT.

News March 21, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 21) 28.70அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.95அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 22 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 21, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 20) காலை 10 மணிக்கு காவல்துறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆணையரின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 3 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி குமரி சந்திப்பில் துண்டு பிரசுரம் விநியோகம்.#மாலை 4 மணிக்கு மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து வடசேரி அண்ணா சிலை முன்பு திராவிடர் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

News March 21, 2025

குமரி: பாசனத்திற்காக ஜூன் 1ஆம் தேதி அணைகள் திறப்பு

image

குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு அணைகளில் இருந்து ஜூன் மாதம் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடிக்காக வருகிற ஜூன் 1ஆம் தேதி அணைகள் வழக்கம்போல் திறக்கப்படும் என்று நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று(மார்ச் 20) தெரிவித்தனர்.

News March 21, 2025

குமரியில் 129 ஓட்டுநர் & நடத்துநர் காலியிடங்கள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்டத்திற்கு 129 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். <>இங்கு கிளிக்<<>> செய்து இன்று(மார்ச் 21) முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்.நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.

News March 20, 2025

ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணி முடிவடையும் – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!