Kanyakumari

News March 26, 2025

பகவதி அம்மன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூல்

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையாளர் தங்கம், மேலாளர் ஆனந்த், ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் நேற்று(மார்ச்.25) திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 153 வசூலாகியிருந்ததாக தகவல். இது தவிர 4.5 கிராம் தங்கம், 32.950 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் இருந்தன.

News March 26, 2025

குமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் வசூல் விவரம்

image

குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இன்று(மார்ச்.25) அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இணை ஆணையர் பழனிகுமார் உதவி ஆணையாளர் தங்கம் மேலாளர் ஆனந்த் ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26லட்சத்து 46ஆயிரத்து 153வசூலானது. இதுதவிர 4.500 கிராம் தங்கமும் 32.950 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆனது.

News March 25, 2025

குமரி +2 மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

குமரி ஆட்சியர் அழகு மீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்புக் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 30.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். *தெரிந்த மாணவர்களுக்கு பகிரவும்*

News March 25, 2025

மும்பை-குமரி இடையே சிறப்பு ரயில் சேவை

image

மும்பை-குமரி இடையே புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதல் முறையாக, இந்த ரயில் கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
வஎ. 01005/01006 ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 25 வரை புதன் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மும்பையிலிருந்து
செவ்வாய் இரவு 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறு மார்க்கத்தில் குமரியிலிருந்து
வியாழன் மாலை 4:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ரயில் பயணிகளுக்கு பகிரவும்

News March 25, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 25) 28.48 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 25, 2025

நாகர்கோவில்-கச்சிகுடா சிறப்பு ரயில் நீட்டிப்பு 

image

நாகர்கோவிலில் இருந்து கட்சிகுடா வரை செல்லும் ரயில் வாராந்திர சிறப்பு ரயிலாக  இயக்கப்பட்டு வரும் நிலையில்,இந்த ரயில் வருகிற மே மாதம் நான்காம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது. 

News March 25, 2025

குமரியில் ரவுடிகளின்  தீவிர கண்காணிப்பு

image

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை கண்காணித்து கைது செய்ய டிஜிபி உத்தரவு விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர் இதில்தொடர்ந்து தவறு செய்து வருபவர்களை போலீசார் கைது செய்ய தொடங்கியுள்ளனர்.

News March 25, 2025

மின்சாரம் தாக்கி நடுக்கடலில் குமரி மீனவர் பலி

image

குளச்சலை சேர்ந்தவர் மீனவர் லிபின்ஸ்டன் மார்ச் 20ம் தேதி மீனவர்களோடு மீன்பிடிக்க சென்றார்.நேற்று பாம்பன் தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது,படகில் உள்ள ஸ்விட்ச்சை ஆன் செய்த லிபின்ஸ்டன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.அவரை மீட்டு ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததனர்.இது குறித்து மண்டபம் போலீசார் விசாரணை.

News March 24, 2025

நாகர்கோவில் பிரபல தனியார் ஹோட்டலுக்கு அதிரடி சீல்

image

நாகர்கோவிலில் உள்ள லியாகத் என்னும் ஹோட்டலில் நேற்று மந்தி பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த ஓட்டலில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உணவின் தரம் குறைவாக இருந்ததால் ரூ.10000 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். *நண்பர்களுக்கு பகிரவும்*

News March 24, 2025

குமரியில் வெளியான காசநோய் ரிப்போர்ட்

image

குமரி மாவட்டத்தில் 2023ல் 1356 பேருக்கும், 2024 ல் 1282 பேருக்கும் காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதில் குமரி அரசு மருத்துவ கல்லூரியில் 2023-ல் கண்டுபிடிக்கபட்ட 415 பேரில் 274 பேருக்கு நுரையீரல் காசநோயும், 130 பேருக்கு நுரையீரல் அல்லாத உறுப்புகளில் காசநோயும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 11 குழந்தைகளும், 11 HIV நோயாளிகளும், 110 சர்க்கரை நோயாளிகளும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. 

error: Content is protected !!