Kanyakumari

News October 8, 2025

குமரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

image

குமரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 37வது வார்டு பகுதியில் தேவி முத்தாரம்மன் மண்டபத்தில் வைத்தும், குளச்சல் நகராட்சி 8 முதல் 13வது வார்டு வரை காசிம் மண்டபத்தில் வைத்தும், நெய்யூர் பேரூராட்சி சிஎஸ்ஐ சமூக நலக்கூடத்திலும், கிள்ளியூர் பேரூராட்சி முஞ்சிறை, மிடாலம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

News October 7, 2025

கல்வி வரி., நாகர்கோயில் மாநகராட்சி வேண்டுகோள்

image

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள 35 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 8 அரசு நடுநிலை பள்ளிகளின் பராமரிப்பு செலவீனத்துக்கு கல்வி வரி விதித்திட அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் வாடகை மதிப்பில் அரையாண்டிற்கு 0.25% கல்வி வரியாக நிர்ணயம் செய்து வசூல் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் இவ்வலுவலகத்தில் 30 தினங்களுக்குள் தெரிவிக்க மாநகராட்சி கேட்டுள்ளது.

News October 7, 2025

குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

கன்னியாகுமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 7, 2025

நாகர்கோவில்: மாணவி வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

image

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஆசிக்முகமது ஷேக்(29) மார்த்தாண்டத்தில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்த போது நித்திரவிளையை பகுதியைச் சேர்ந்த  +1 மாணவியிடம் பழகி, அவரை கடத்திச்சென்று திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா ஆசிக்முகமது ஷேக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

News October 7, 2025

சுசீந்திரம் வந்த அம்மனுக்கு காவல்துறையினர் அணி வகுப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் நவராத்திரி விழா முடிந்து இன்று முன்னு தித்த நங்கை அம்மன் மீண்டும் சுசீந்திரம் வந்தது. அப்போது காவல்துறையினர் அணி வகுப்பு மரியாதை கொடுத்து முன்னுதித்த நங்கை அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

News October 7, 2025

குளச்சலில் திருட வந்த இடத்தில் சில்மிஷம்

image

குளச்சல் அருகே ஒரு கிராமத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது அதிகாலை கொள்ளையன் ஒருவன் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அப்போது அப்பெண்ணை பார்த்த கொள்ளையன் திருட வந்ததை மறந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றார். அப்போது பெண் கூச்சலிட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த ஜோஸ் ஆன்றனி(24) என்பவரை கைது செய்தனர்.

News October 7, 2025

கடையால் பேரூராட்சியில் முறைகேட்டில் 4 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பராமரிப்பு பணிகளில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை பொறியாளர், மண்டல உதவி நிர்வாகப் பொறியாளர் உட்பட நான்கு பேர் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 7, 2025

குமரி: ஆசிரியர் உட்பட 7,267 காலிப்பணியிடம் அறிவிப்பு

image

குமரி மக்களே; Ministry of Tribal Affairs கீழ் செயல்படும் (EMRS) பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்காக மொத்தம் 7,267 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு முதல் B.ED வரை படித்த விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப 18,000 முதல் 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் (விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.23) *ஷேர் பண்ணுங்க

News October 7, 2025

நாகர்கோவில் கொலையில் 2 ரவுடிகள் உட்பட 4 பேர் கைது

image

கோட்டார் அருகே சரலூரை சேந்தவர் காண்டிராக்டர் ராஜ்குமார்(56). இவருடன் மகன் நதினுக்கு வேலை வாங்கித் தருவதற்காக ஒரு நபரிடம் ரூ.2 லட்சம் கொடுத்த நிலையில் அந்த நபருக்கும், நதினுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்காதரன் என்பவரிடம் ராஜ்குமார் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். இதில் 2 ரவுடிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News October 7, 2025

குமரியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

தக்கலை உபமின்நிலையம், உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் அக்.9 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர்குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மேக்காமண்டபம், முட்டைக்காடு, மருந்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!