India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தனது 93வது பிறந்த நாளை நேற்று(மார்ச் 19) கொண்டாடினார். உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகளும் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அவரை சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கிரிஸ்டல் ஜாய் லெட் தலைமையில் இது நடைபெற்றது. பொதுத்தேர்வு தொடர்பான அறிவுரைகளை முறையாக கண்காணிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
குமரி மக்களே, வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க,★ லோசான அடைகளை அணிவது நல்லது.★ டீ,காபி, மது வகைகளை தவிர்ப்பது நல்லது.★ தினமும் 2 நேரம் குளிப்பது நல்லது.★ எலுமிச்சைசாறு, நொங்கு, மோர் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.★ பகலில் வெயிலில் அதிகம் போகாமல் நிழலான காற்றோட்டமான இடத்தில் இருத்தல் வேண்டும்.
குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ்பி ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் 10 நாட்களில் 4 கொலைகள் நடைபெற்று உள்ளது. பழைய குற்றவாளிகள், ரவுடிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் காட்டக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 20) 28.66அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.05அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.76 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 122 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 23 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் இருந்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தில் I.T.I முடித்தவர்கள் ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில் மாதம்தோறும் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். தேவைப்படுவோர் ஏப்ரல் 4ஆம் தேதி குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து துறை அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. SHARE IT.
சரலபள்ளி – கன்னியாகுமரி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நலகொண்டா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர், குடுர், திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் ஜூன் மாதம் இறுதி வரை இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. SHARE IT.
#இன்று(மார்ச் 19) காலை 8:30 மணிக்கு சட்டவிரோத சம்பள வெட்டு முறையை கைவிட வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கிள்ளியூர் சந்திப்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு விவேகானந்தர் படகு குழாம் நீடிப்பு செய்வது குறித்து மீன்துறை உதவி இயக்குநர் வாவா துறை மீனவ கிராம நிர்வாக கமிட்டியினருடன் சின்ன முட்டம் மீன்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
நாகர்கோவில், கோட்டாறு ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்த தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி தலைவி உமா ரதி, மாநகராட்சி கவுன்சிலர் சுனில் குமார், பாஜக வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ராணி, பொதுச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று(மார்ச் 19) கடை விற்பனையாளர் நாராயணன் கொடுத்த புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வெறி நாய்களை கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெட்டா சோதனை சாவடி வழியாக தமிழ்நாடு எல்லை பகுதியான அரகநாடு கட்டச்சல் பகுதியில் விட்டபோது வாகனத்தை பொதுமக்கள் விரட்டி சென்று சிறைபிடித்தனர். ஒரு சில நாய்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.