India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 21) 28.70அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.95அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 22 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#இன்று(மார்ச் 20) காலை 10 மணிக்கு காவல்துறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆணையரின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#மாலை 3 மணிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி குமரி சந்திப்பில் துண்டு பிரசுரம் விநியோகம்.#மாலை 4 மணிக்கு மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து வடசேரி அண்ணா சிலை முன்பு திராவிடர் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஒன்று, சிற்றாறு இரண்டு அணைகளில் இருந்து ஜூன் மாதம் 1ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடிக்காக வருகிற ஜூன் 1ஆம் தேதி அணைகள் வழக்கம்போல் திறக்கப்படும் என்று நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று(மார்ச் 20) தெரிவித்தனர்.
திருநெல்வேலி மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்டத்திற்கு 129 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம். <
குமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.
கொப்பரை விலை அதிகமாக உள்ளதால் குமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் இயங்கி வரும் தென்னை மதிப்பு கூட்டு மையத்தில் கடந்த மூன்று மாதமாக உற்பத்தி நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னை மரம் கூட்டு மையத்தில் உள்ள அனைத்து அலகுகளையும் முழு அளவில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
தோவாளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனெனில் பயிர் வளர்ச்சிக்கு மண் எவ்வளவு பங்கு உள்ளதோ, அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு. எனவே பாசன நீரை பரிசோதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திருப்பதி சாரத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்தை அணுகி விவசாயிகள் நீரின் தரத்தை தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 29.03.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நீர்வளத்தை காப்பது மற்றும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தண்ணீரின் தேவை, சிக்கனம் குறித்துமு் எடுத்துரைக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார். *ஊராட்சி மக்களுக்கு பகிரவும்*
குமரிமாவட்டத்தில் கோடை மழை பல்வேறு பகுதிகளில் பெய்துள்ளது. அதிகபட்சமாக பேச்சிப் பாறை பகுதியில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பத்மநாபபுரம் 12, பரளி ஆறு 10, தும்புக்கோடு 10, சிற்றாறு ஒன்று 9, மைலார் 8, திற்பரப்பு 6, சிவலோகம் 5, தடிக்காரன் கோணம் 4, சிற்றாறு இரண்டு 3, குழித்துறை டவுன் 2, தக்கலை 2, பாலமோர் 2, மாம்பழத்துறையாறு அணை 2, மணலோடை 2, கல்லார் 2, அருமனை 2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று வருமான வரி சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் வருமான வரி தலைமை ஆணையர் வசந்தன் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி வருமானவரி மூலம் அரசுக்கு வருவாய் வருகிறது என்றும், இதில் தமிழகத்தின் பங்கு 6.2%. குமரி மாவட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருகிறது என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.