India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதன் மூலம் இந்தியாவின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை அமையும் என்று ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். SHARE IT.

குளச்சல் துறைமுகத்தில் ஸ்டாலினி ஹட்சன் அலெக்ஸ் என்பவர் படகில் ஒடிசாவை சேர்ந்த சிவா என்பவர் வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை விசைப்படகு மீன்பிடிக்க செல்ல தயாரான போது சிவா மற்றும் உடன் இருந்த தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் என்பவர் சிவாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். அஜினை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக குளச்சல் கடலோர குழுமா பாதுகாப்பு போலீசார் இன்று தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆனது நாளை (18.01.2025) காலை 9:30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 18 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். *ஷேர்

2022ல் கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவர் கஷாயத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அவரின் காதலி க்ரீஷ்மா, க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் இருந்து க்ரீஷ்மாவின் தாய் விடுவிப்பு. தண்டனை குறித்த விவரங்கள் நாளை (ஜன.18) அறிவிக்கப்படவுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு தை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. 24ஆம் தேதி நடைபெறும் 8ஆம் நாள் திருவிழா அன்று கலிவேட்டை நிகழ்ச்சியும், 27ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் பங்கேற்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைப்பாளர்களை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நியமித்துள்ளார். அதன்படி குமரிக்கு சகாயராஜ் சீனிவாசன், குளச்சலுக்கு சாமுவேல் சேகர் டொனல், பத்மநாபபுரம் தொகுதிக்கு ஜோன்ஸ் இம்மானுவேல், ரத்தினகுமார் விளவங்கோடுக்கு ஜோதிஷ்குமார், சுரேஷ் கிள்ளியூருக்கு கோபன், சுரேஷ் நாகர்கோவிலுக்கு சிவபிரபு, சகாய பிரவீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று(ஜன.16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகள் கோழி கழிவுகள்கொண்டு வரப்படுவதை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனைக் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#இன்று(ஜன.17) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறையில் மருத்துவர் நியமிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நாகர்கோவில் வடசேரியில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.#மாலை 4 மணிக்கு பிணந்தோடு சந்திப்பில் நாதக ஆர்ப்பாட்டம்.

கோழிவிளையில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிதரன் (34). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சசிதரன் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவது வழக்கம். இதனால் மன உளைச்சல் அடைந்த சசிதரன் நேற்று 15ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொண்டு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.16) காலை 6:00 மணிக்கு தடை செய்யப்பட்ட பகுதியான மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்ற 10 கனிம வள லாரிகளை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் பறிமுதல் செய்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.