Kanyakumari

News November 15, 2024

குமரியில் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

குமரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெற விரும்புவோர் தங்களை பற்றி முழு விவரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை வரும் 22 ஆம் தேதிக்குள் குமரி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்பிக்கலாம். SHARE IT.

News November 14, 2024

மும்பையில் விஜய் வசந்த், திருமாவளவன் பரப்புரை

image

மும்பை தாராவி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி கைக்வாட் ஆதரவாக அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எம். பி மற்றும் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம் பி ஆகியோர் இணைந்து இன்று (நவம்பர் 14) தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். உடன், திரளானோர் கலந்துகொண்டனர்.

News November 14, 2024

அமைச்சர் தங்கம் தென்னரசு குமரி வந்தார்

image

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் 2 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருதுநகர் மாளிகைக்கு வந்த அவரை, கலெக்டர் அழகு மீனா, போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மேயர் மகேஷ், ஒன்றிய செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் வரவேற்றனர்.

News November 14, 2024

பாஜகவினர் 18 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு

image

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் சந்திப்பில் பாஜக நகர செயலாளர் சுமன் உட்பட 18 பேர் ஒன்று கூடி எந்தவித போலீஸ் அனுமதியும் இல்லாமல் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து சுமன், சுஜன் ராஜ், பிரதீஷ் விஜி ராஜு பால் மனோஜ் சீமா நந்தினி மற்றும் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 14, 2024

கிள்ளியூர் அருகே வெடி பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

image

புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் கிள்ளியூர் அருகே கொல்லன்விளை என்ற இடத்தில் ரோந்து சென்றார். அப்போது, அங்கு வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 10 கிலோ வெடி உப்பு, எட்டரை கிலோ சல்பர் மிக்ஸிங் வெடி மருந்து, ஏழரை கிலோ 28 வெடி குச்சிகள் உள்ளிட்ட வெடி மருந்துகளை கைப்பற்றினார். இது தொடர்பாக செல்வராஜ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தார்.

News November 14, 2024

குமரி மாவட்ட விளையாட்டு அதிகாரி இடமாற்றம்

image

குமரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேஷ், தென்காசி மாவட்ட இளைஞர் நலம் மற் றும் விளையாட்டு துறை அதிகாரியாக மாற்றப்பட்டார். தென்காசி மாவட்ட விளையாட்டு துறை அதிகாரியாக இருந்த ரெத்தினபாண்டியன், குமரி மாவட்ட விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று(நவ.,13) பிறப்பித்துள்ளது.

News November 14, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்

image

#இன்று(நவ.,14) காலை 10 மணிக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து ஆசாரிப்பள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு நடை பேரணி.#மாலை 5.30 மணி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

News November 14, 2024

குமரியில் சீசன்! லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டப்பாடு

image

குமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ.,16ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி லாட்ஜ் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுடன் கலந்தலோசனை கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் லாட்ஜ் உரிமையாளருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

News November 14, 2024

நாகர்கோவிலில் நவ.15ல் வேலைவாய்ப்பு முகாம்

image

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் நவ.15ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.குமரி மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.10, + 2,Diploma, I-ITI கணினி பயிற்சி கல்வித்தகுதியுடையவர்கள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

வனத்திற்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது வழக்கு

image

அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களோ, காணி குடியிருப்பைச் சார்ந்த பழங்குடியினரோ வெளிநபர்களை அனுமதியின்றி வனப்பகுதிக்குள் அழைத்து வந்து தவறான நிகழ்வுகள் ஏதும் நிகழாத வண்ணம் இருக்க வேண்டும். மீறுகிறவர்களுக்கு 1882 தமிழ்நாடு வன சட்டம் மற்றும் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வன வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!