Kanyakumari

News November 21, 2024

3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

image

குமரி மாவட்டத்தில் 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.,4ஆம் தேதி அடைவுத்திறன் தேர்வு நடத்த ஏதுவாக, இம்மாதம் 25ஆம் தேதி மாதிரி தேர்வு நடத்திட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவ.,25 முதல் 29ஆம் வரை நடைபெற இருக்கிறது. வினா அமைப்பு, தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 21, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் இன்று(நவ.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.

News November 21, 2024

மாநகராட்சி பெண் பணியாளர்கள் 42 பேருக்கு மார்பக புற்றுநோய்!

image

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் 834 பெண் பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 30 நாள் நடந்த பரிசோதனையில், 42 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிந்தது. இது 4.5% ஆகும். நோய் பாதித்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் நேற்று(நவ.,20) கூறியுள்ளார்.

News November 21, 2024

காண்ட்ராக்ட்ரை வெட்டியவர் வேலூர் ஜெயிலில் அடைப்பு

image

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் காண்ட்ராக்டர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிய வழக்கில் பழனியாச்சி உட்பட இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பழனியாச்சியின் மகன் மாரியப்பன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

News November 21, 2024

SP அலுவலகத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது!

image

குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின்போது ஒரு பெண் மனு கொடுத்தார். அவர் தன்னுடைய மகனை அழைத்து வந்திருந்த நிலையில், நீங்கள் மட்டும் வந்தால் போதும், பிள்ளைகளை அழைத்து வராதீர்கள் என எஸ்பி அறிவுரை கூறி கண்டித்தார். தொடர்ந்து அவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

News November 21, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#கொல்லமாவடி முத்தாரம்மன் கோவிலில் காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம். 12 மணிக்கு அபிஷேகம். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை. #நாகர்கோவில் என்.,கே.ஆர். மகாலில் காலை 10 மணிக்கு அ.தி.மு.க கள ஆய்வுக்கூட்டம். #கிண்ணிக்கண்ணன் விளை சடச்சிப்பதியில் மாலை 6 மணி பணிவிடை. #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் மாலை 5 மணிக்கு திருப்பலி. இரவு 7.30 மணிக்கு ஆண்டுவிழா பொதுக்கூட்டம் ஆகியன நடைபெறும்.

News November 21, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு திருவிதாங்கோடு சந்திப்பில் பழுதடைந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்காததை கண்டித்து CPIML லிபரேசன் கட்சி சார்பில் சாலை மறியல்.  #வீட்டு வரி உயர்வை கண்டித்து காங்., கட்சி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். #காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காணாமல்போன கடியப்பட்டணம் மீனவர்களை கண்டுபிடித்து தர கேட்டு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News November 21, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு ஒழுகினசேரி திருமண மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம். #வழக்கறிஞர் கண்ணன் படுகொலையை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு. #மாலையில் நாகர்கோவில் நாகராஜா திடல் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மாநாடு. அமைச்சர் ராஜகண்ணப்பன், செல்வப் பெருந்தகை பங்கேற்பு.

News November 21, 2024

குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

image

திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்வது நல்லது. SHARE IT.

News November 21, 2024

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் குமரி எம்.பி. மனு

image

சென்னையில் தென்னக ரயில்வேயில் பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை நேற்று (நவ. 20) கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் மற்றும் நாகர்கோவில் திருவனந்தபுரம் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

error: Content is protected !!