Kanyakumari

News November 24, 2024

சவுக்கு தோப்பில் கிடந்த மனித எலும்பு கூடு

image

கன்னியாகுமரி மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு தோட்டம் அருகே கடற்கரையில் இன்று மனித உடல் பாகங்கள் அழுகி சிதைந்த நிலையில் எலும்பு கூடு கிடந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் சவுக்கு தோப்பில் கிடந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 24, 2024

சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க அரசு அழைப்பு

image

2025 பொங்கலன்று சென்னை & 7 இடங்களில் நடக்கும் “சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்” பங்கேற்க விரும்பும் குமரி மாவட்ட கலைக்குழுவினர், தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை CD/Pen Drive ல் உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி 627007. போன்: 0462-2553890 Email: racct-nu@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News November 24, 2024

அறிக்கை வெளியிட்டுள்ள சுப.உதயகுமார்

image

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“கூடங்குளம் வழக்குகள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு சட்டப்பேரவை தலைவர் சில காவல்துறை அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்; இன்னொரு பக்கம், புதிதாக சம்மன் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்;அரசுக்குத் தெரியாமல் இவையெல்லாம் நடக்கின்றன என்றால், இது என்ன?; விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்

News November 24, 2024

நீர்மூழ்கிக் கப்பல் மோதி மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை

image

குமரி, கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ் மோன் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோவா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நீர்மூழ்கிக் கப்பல் படகுடன் மோதியது. இதில் ஜெனிஸ் மோன் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் படகுடன் மூழ்கிவிட்டனர். அவர்களை மீட்க இன்று தெற்காசிய மீனவர் தோழமை மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News November 24, 2024

குமரி கடல் பகுதியில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

image

காற்றழுத்த தாழ்வு நிலையின் வெளி சுற்றின் காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை, குமரி முனைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் கடலில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

முன்னாள் எம்எல்ஏ தந்தை உயிரிழப்பு

image

திருவட்டார் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தந்தை ராஜையன் (வயது 88) நேற்று இரவு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் செல்லச்சாமி முன்னாள் எம்பி பெல்லார் மின் உட்பட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

News November 24, 2024

ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு வரும் டிச.14ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் நவ.22 என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை(நவ.25) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இணை இயக்குநர் மகேஷ்வரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேற்று(நவ.23) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 24, 2024

குமரி மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பெண்கள் கைது

image

கருங்கல் திப்பிறமலை ராணுவ வீரர் ஜெர்சன்(28) கடந்த ஜூன் மாதம் அருகில் உள்ள 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றார். புகாரின் பேரில் இவரை போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் புகாரை வாபஸ் பெறக்கேட்டு ஜெர்சனின் தாய் விஜயகுமாரி, சகோதரி ஆன்சிலின் ஆகியோர் மிரட்டியதை அடுத்து இருவரையும் நேற்று(நவ.23) குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

News November 24, 2024

குமரியில் ஒரே நாளில் 4259 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 642 பகுதிகளில் மொத்தம் 1702 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று(நவ.23) நடந்தது. பெயர் சேர்க்க நேற்று மட்டும் 4259 பேர் விண்ணப்பித்திருந்தனர். பெயர் நீக்கம் செய்ய 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இன்றும் சிறப்பு முகாம் நடக்கிறது. மேலும், வெள்ளிச்சந்தை பள்ளியில் நடந்த முகாமை ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.

News November 23, 2024

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் பயணிகளுக்கு நற்செய்தி

image

தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும் இரு 3 அடுக்கு ஏசி பெட்டியும் இரு தூங்கும் வசதி பெட்டியும் ஒரு முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டியும் வரும் நாட்களில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

error: Content is protected !!