India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ.19) நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள சுற்று பிரகாரத்தை சுற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று தாம்பரத்திலிருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆகியவை இணைந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக குமரி கடலில் நாளையும் நாளை மறுநாளும் (நவ.20,21) 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 42 கடற்கரை கிராமங்கள் கண்காணிக்கப்படுகிறது.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஓய்வூதியம் மூக்குக்கண்ணாடி உள்ளன.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14 மற்றும் 14.86 அடி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.24 அடி நீரும்,77அடி நீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 64.68 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி 42.65 அடி கொண்ட பொய்கையில் 15.1 அடி நீரும் இருப்பு உள்ளது.
போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பெண் போலீசார் அந்த பகுதி கல்வி நிறுவங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பார். இவர்கள் மாணவிகளுடன் தோழியைப்போல பழகுவர். வீட்டில், பள்ளியில் பகிர்ந்துகொள்ள இயலாத பிரச்னைகளை இவர்களிடம் தெரிவித்தால் தீர்வு காண்பர். நம் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(நவ.,18) நாகர்கோவிலில் நடந்த விழாவில் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.
#காலை 9 .30 மணி சட்டமன்ற பொது கணக்கு குழு குமரியில் கூடுதல் மற்றும் திட்டப் பணிகள் ஆய்வு.#காலை 10 மணிக்கு தக்கலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆலோசனைக் கூட்டம். #கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவா பாரதி சார்பில் பயிற்சி முகாம்.#காலை 10 மணி குலசேகரம் சந்திப்பில் இருந்து விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐஎம் சார்பில் வாகனப் பிரச்சாரம்.
குமரி ரேசன் கடைகளில் காலியாக இருந்த 35 விற்பனையாளர், 6 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான நேர்முகத்தேர்வு நவ.,25 to டிச.,2ம் தேதி வரை நாகர்கோவில் ஞானதாசன் பாலிடெக்னிக்கில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் அனுமதி சீட்டினை drbkka.in வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை ‘04652-278257’-ல் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.