India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண் அட்டை வழங்கும் திட்டத்தில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சேர்த்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும், திட்டம் தொடங்கப்பட்ட 18 நாட்களில் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்படுகிறது. குடும்பங்களின் உடல் நலத்திற்கான நுகர்வு செலவு பற்றிய விபரங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 16 நகரப் பகுதிகள் மற்றும் 8 கிராம பகுதிகளில் துறை அலுவலர்களால் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக்கூட்டு மையத்தில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் 4 மரச்செக்கு அலகுகள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மரச்செக்குகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து நடத்த விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்களை 99443569945, 9344168207 மற்றும் 9597450349 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநர் இன்று கூறியுள்ளார்

கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் இன்று (பிப்.28) கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள விவேகானந்த கேந்திராவுக்கு வந்த அவருக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார். இதில் விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், கோரிக்கைகளை கேட்டறியும் விதமாகவும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. ஆரல்வாய்மொழி தொடங்கி தடிக்காரன்கோணம் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்களும் பக்தர்களும் வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், புற நோயாளிகள் பிரிவு ஒன்று தற்காலிகமாக மருத்துவ அலுவலர்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று உத்தரவிட்டார்.

காற்று சுழற்ச்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று(பிப்.28) தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் இந்த மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதனால் இந்த பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 13 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் – கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் கோ. ராமகிருஷ்ணன் இடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பலர் கலந்து கொண்டனர்.

திருவிதாங்கூர் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபக தலைவரான தோழர் பி கிருஷ்ண பிள்ளை வாழ்க்கை வரலாறு தமிழில் வீர வணக்கம் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவருகிறது. தலைமறைவு காலத்தில் பாம்பு கடித்து மரணமடைந்த கிருஷ்ண பிள்ளை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடக்குமுறைக்கு எதிராக களம் கண்டவர். குமரி மாவட்டம் இடலாகுடியில் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மேனகா. இவரது தாய் நமது குமரி மாவட்டத்தில் உள்ள திக்குறிச்சியை சார்ந்தவர். பிறந்ததும் குமரியே. இவரது மகள் தான் தற்போது இந்திய சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் உச்சம் தொட்டு, தற்போது பாலிவுட்டில் அடி எடுத்து வைத்த கீர்த்தி நம்ம ஊரு என்பதில் நமக்கு சந்தோசம் தானே மக்களே! *நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க
Sorry, no posts matched your criteria.