India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.
தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் படி இன்று, திருவட்டார் தாலுகா பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு திருவட்டார் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவ மாணவிகளிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், டி.வி, மொபைல் போன்ற கருவிகளில் பொழுதை போக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று(நவம்பர் 20) கடலில் பயணம் செய்து விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மழை நின்ற பிறகு படகு சேவை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெண் சிசுக்கொலையை தடுக்க உருவான “முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு” திட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 1,948 பேரும், 2022-23ல் 2,242 பேரும், 2023-24ல் 1,771 பேரும், 2024-25.ல் இதுவரை 475 பேர் என மொத்தம் 6,436 பெண் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் வைப்புத்தொகை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மாவட்ட அதிகாரி விஜய மீனா தெரிவித்துள்ளார்.
#கொல்லமாவடி முத்தாரம்மன் கோயிலில் காலை 11 மணிக்கு கலச பூஜை, மாலை 6-க்கு பகவதி சேவை, இரவு 8-க்கு வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது. #காமச்சன் பரப்பு பெருமாள் கோயிலில் காலை 9 மணிக்கு தோட்டுக்காரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபாபிஷேகம். #கிண்ணிக்கண்ணன்விளை சடச்சி பதியில் மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடுவாசிப்பு. #மார்த்தாண்டம் கிறிஸ்து அரசல் ஆலயத்தில் மாலை 6.45 மணிக்கு நற்செய்தி கூட்டம்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(நவ.,21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாகர்கோவில் to எழும்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும், மறு மார்க்கத்தில் 22ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்படும். SHARE IT.
#காலை 10 மணிக்கு கோழிவிளை சந்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதாக கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதம். #குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் சி விஜி இன்றும் நாளையும்( 20, 21) ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. #உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் தாலுகாவில் ஆட்சியர் ஆய்வு.
குமரி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
இன்று (நவ.20) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை “உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டப்படி மாவட்ட ஆட்சியர் அழக மீனா ஆய்வு நடத்தும் இடங்கள்: வேர்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலகம், PACB, அங்கன்வாடி, திருவட்டார் பஸ் நிலையம், காவல் நிலையம், சார்பதிவகம், G.H.S. அரசு பணிமனை, குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு நிலையம், பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், வானிலை மையம்.
Sorry, no posts matched your criteria.