India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று குமரியில் கூறியதாவது, கன்னியாகுமரியில் 1,343 கி.மீ நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 237 கி.மீ நீளமுள்ள 177 சாலை பணிகள் ரூ.226 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 163 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 14 பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 பாலப்பணிகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு 3 பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்றார்.
#ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று(நவ.,22) 2வது நாளாக வழக்கறிஞர்கள் நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல் மற்றும் குழித்துறை நீதிமன்றங்கள் புறக்கணிப்பு. #மாலை 5.30 மணிக்கு கப்பியறை பேரூராட்சி பணியாளர் ராபியை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்து நீர்வரத்து சீரானதை அடுத்து காளிகேசம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:-18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.76மற்றும் 14.86.அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42. 4அடி நீரும்,77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 64.47அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரி அருகே 4 வழிச்சாலையில் இன்று இருசக்கர வாகனத்தில் பரவூரைச் சேர்ந்த இருவர் நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது 7010363173 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர வதனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,“சைபர் குற்றத்திற்கு இரையாகாதீர்கள்; எச்சரிக்கையாக இருங்கள்; லோன் வாங்கித் தருவதாக கூறி உங்களுடைய ஆதார், பேங்க் அக்கவுண்ட், சிம்கார்டுகளை ஏஜென்ட் கேட்டால் கொடுக்க வேண்டாம்;சைபர் குற்றங்களுக்கு அதை பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.,4ஆம் தேதி அடைவுத்திறன் தேர்வு நடத்த ஏதுவாக, இம்மாதம் 25ஆம் தேதி மாதிரி தேர்வு நடத்திட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவ.,25 முதல் 29ஆம் வரை நடைபெற இருக்கிறது. வினா அமைப்பு, தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் இன்று(நவ.,21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதலால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. SHARE IT.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் 834 பெண் பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 30 நாள் நடந்த பரிசோதனையில், 42 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிந்தது. இது 4.5% ஆகும். நோய் பாதித்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் நேற்று(நவ.,20) கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.