Kanyakumari

News November 23, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். #காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம். #மாலை 5 மணிக்கு குளச்சல் பேருந்து நிலையத்தை திறக்காததை கண்டித்து CPIML லிபெரேஷன் கட்சி சார்பில் குளச்சலில் ஆர்ப்பாட்டம்.

News November 23, 2024

பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும்: குமரி SP

image

நாகர்கோவிலில் மாவட்ட SP சுந்தரவதனம் தலைமையில் நேற்று(நவ.,22) மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய SP சுந்தரவதனம், போக்சோ புகார்களுக்கு தாமதமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். திருட்டுப் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் நீதிமன்ற பிடி ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

News November 23, 2024

பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கல்

image

ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன் பேரில் வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் ஓட்டுனர் உரிமங்களை நேற்று வழங்கினார். மொத்தம் 35 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டன.

News November 22, 2024

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

image

RRB தேர்வை முன்னிட்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இம்மாதம் 24 ம் தேதி முதல் இம்மாதம் 28 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோயில்-திருவனந்தபுரம் இடையே இம்மாதம் 25 ம் தேதி முதல் 29 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை கோட்ட ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News November 22, 2024

குமரி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு அறிவிப்பு

image

குமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“அமைப்பு சாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு பல சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியம், இறப்பு காப்பீடு மற்றும் ஊனமுற்றால் நிதி உதவி போன்ற நன்மைகளைப் பெற தொழிலாளர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி, இ-ஷ்ரம் போர்ட்டில் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என கூறியுள்ளார்.

News November 22, 2024

குமரி ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஊராட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் அந்தப் பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 25 ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்துகொண்டு எரிவாயு விநியோக குறைகளை கூறலாம்.

News November 22, 2024

பிறப்பு இறப்பு சான்றிதழில் ஒரு முறை மட்டுமே திருத்தம்!

image

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பித் தலைமையில், ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலையில் நேற்று(நவ.,21) நடைபெற்றது. கூட்டத்தில், புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பிறப்பு, இறப்பு சான்றிதழில் ஒருமுறை மட்டுமே திருத்தம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

News November 22, 2024

குமரி நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்

image

குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையும் நேர்த்தியாக உள்ளதாக கூறுகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் நாற்று நடவு பணி செய்து வருகின்றனர். 4.75 சென்ட் பரப்பளவில் நாற்று நடவு செய்வதற்கு ரூ.240 கூலியாக வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நாற்று நடவுக்கு கூலியாக ரூ.5 ஆயிரம் பெற்று வருகின்றனர்.

News November 22, 2024

இன்ஸ்பெக்டர், SI துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்: குமரி SP

image

குமரி மாவட்ட SP சுந்தரவதனம் நேற்று(நவ.,21) கூறியதாவது, பணியில் இருக்கும் போலீசாரை குடிபோதையிலிருப்பவர் தாக்கும் சம்பவம், போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் குற்றவாளிகள் தப்பிக்கும் நிகழ்வு ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்றன. பணியில் இருக்கும் இன்ஸ்பெக்ட்ர், SI கண்டிப்பாக கைதுப்பாக்கி வைத்திருக்க வேண்டும். கைத்துப்பாக்கி வைத்திருக்கும்போது அவர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்றார்.

error: Content is protected !!