India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் அடுத்த மாதம் 1, 6 ,8 , 11 , 13 ,15 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும். மேலும் 1, 6, 8, 11, 13, 15ஆ கிய தேதிகளில் கோவையில் இருந்து நாகர்கோவில் வரும் ரயிலும் கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குமரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்<

குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க

நேசமணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் (58). அக்.24-ந் தேதி இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜனிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திடீரென உடல்நலக்குறைவால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

குமரி ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தவறான கருத்துக்களை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்கள். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது தவறான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
Sorry, no posts matched your criteria.