Kanyakumari

News March 9, 2025

நாகர்கோவில் கொடூர கொலைக்கு காரணம் ரூ.150 

image

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த வேலு எரித்து கொலை செய்யப்பட்டது, தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி திருமலாபுரத்தைச் சேர்ந்த சுதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, மது குடிப்பதற்காக 150 ரூபாய் வேலு பாக்கெட்டில் இருந்து எடுத்ததாகவும், அவர் காட்டிக் கொடுத்து விடுவார் என கல்லால் தாக்கி எரித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளார். *ரூ.150 க்காக கொலையா? உங்கள் கருத்தை கமெண்ட் பன்னுங்க*

News March 9, 2025

குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இம்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சூறைக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை நாளை திங்கட்கிழமைக்குள் முடித்து விடுவதும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

 குமரி :மார்ச்12ல் பிஎஸ்என்எல் இணைப்பு மேளா  

image

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி மற்றும் வைபர் இணைப்பு பெற்று பணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள ஆசாரிப்பள்ளம் வடிவீஸ்வரம் இடலாக்குடி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளர்களுக்கு மறு இணைப்பு மேளா 12 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

குமரியில் பொது இடத்தில் மது குடித்த 193 பேர் கைது

image

குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், மேம்பாலங்கள், நீர்நிலைகரையோரம் உட்பட பொது இடங்களில் பலரும் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. மது போதையில் அடிதடி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் பொது இடத்தில் மது அருந்துவோரை கைது செய்து வருகின்றனர்.அதன்படி கடந்த 8 நாட்களில் மட்டும் பொது இடங்களில் மது குடித்ததாக மொத்தம் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 8, 2025

வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள வழிமுறை வெளியீடு

image

கோடைகால வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்வது குறித்து சுகாதாரத்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்; ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சம் ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கவேண்டும்; மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 8, 2025

குமரி மாவட்ட ஆட்சியருக்கு விருது

image

பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவுக்கு, உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழையும் விருதையும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.*ஷேர் பண்ணி எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க*

News March 8, 2025

குமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 6500 திருப்பதி லட்டு வருகை

image

குமரி விவேகானந்தபுரத்தில் உள்ள கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் 6500 திருப்பதி லட்டு கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு இன்று(மார்ச்.8) முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க*

News March 8, 2025

நாகர்கோவிலில் டூவீலரில் வந்தவர் எரித்துக் கொலை செய்த கும்பல்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள தெருவில் இன்று காலை,கல்லால் தாக்கி டூ வீலருடன் மர்ம கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார்.

News March 8, 2025

நாகர்கோவிலில் டூவீலரில் வந்தவர் எரித்துக் கொலை செய்த கும்பல்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வயல் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் நாகர்கோவில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள தெருவில் இன்று காலை,கல்லால் தாக்கி டூ வீலருடன் மர்ம கும்பலால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை செய்து வருகிறார்.

News March 8, 2025

ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

image

கன்னியாகுமரியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.

error: Content is protected !!