Kanyakumari

News December 4, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்:- 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.59 மற்றும் 14.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.45 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 59.77அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7அடி நீரும் இருப்பு உள்ளது.

News December 4, 2024

மண்ணுளி பாம்புவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை 

image

குமரி மாவட்ட வனத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சிலர் மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வன சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து இன்றைய விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 350 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 365 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 325 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 4, 2024

விற்பனையாளர் கட்டுணர் தேர்வு: 2,398 பேர் ஆப்சன்ட்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,201 விண்ணப்பித்த நிலையில் 3,232 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். கட்டுணர் பணிக்கு 787 பேர் விண்ணப்பித்த நிலையில், 360 பேர் பங்கு பெற்றனர். இந்த தேர்வில் மொத்தம் 2,398 பேர் பங்கேற்கவில்லை.

News December 4, 2024

மழை காரணமாக கலைத்திருவிழா அடுத்த மாதம் ஒத்திவைப்பு

image

மழை காரணமாக டிச.,4, 6 தேதிகளில் நடைபெற இருந்த மாநில கலைத்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு ஜன.,4ஆம் தேதி கோவையிலும், 6 – 8 வகுப்புகளுக்கு திருப்பூரிலும், 9,10ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் தேதி ஈரோட்டிலும், 11,12 வகுப்புகளுக்கு 3, 4ஆம் தேதிகளில் நாமக்கல்லிலும் போட்டிகள் நடப்பதாக CEO-க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாநில சமக்ரக சிக்‌ஷா திட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

News December 4, 2024

பாபர் மசூதி இடிப்பு தினம்: குமரியில் கண்காணிப்பு தீவிரம்

image

டிச.,6 பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நாளை முதல் டிச.,6 முடிய கண்காணிப்பு தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 4, 2024

ரப்பர் விவசாயிகளுக்கு காப்பீடு: விண்ணப்பிக்க டிச.,14 கடைசி நாள்

image

இந்திய வேளாண் காப்பீடு நிறுவனம் ரப்பர் வானிலை பயிர் காப்பீடு திட்டம் என்ற மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு ஏக்கருக்கு 12,146 ரூபாய் காப்பீடு தொகையாகும். காப்பீடு கட்டணம் ஒரு ஏக்கருக்கு 608 ரூபாய். இந்தத் திட்டத்தில் விவசாயிகள் சேருவதற்கு வரும் 14ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகப்படியான மழை, வெப்பநிலை பாதிப்பை பொறுத்து இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தொழிலாளர் மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி 9வது நாளாக இன்று ரப்பர் கழக தொழிற்சாலை முன் உண்ணாவிரதம். #காலை 11 மணிக்கு வங்கதேச இந்துக்கள் மீது நடக்கும் வன்முறை தாக்குதலை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 5 மணி தக்கலை பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடக்கிறது.

News December 4, 2024

தன்னம்பிக்கையோடு இருந்தால் சாதிக்கலாம்: குமரி கலெக்டர்

image

“மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப்போல சமுதாயத்தில் சிறந்தவர்களாக விளங்கிடும் வகையில் அவர்களின் தனித்தன்மைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்காக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என நேற்று(டிச.,3) நாகர்கோவிலில் நடந்த மற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் அழகு மீனா பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

News December 3, 2024

குமரியில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை கண் புரை நோய் பாதித்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!