India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வர், டி.பார்ம், பி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுக்க முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் என சுதந்திரதினத்தில் அறிவித்திருந்தார். டிச.5ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் mudhalvarmanundhagam.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று(டிச.07) குமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் 474 பேர் மீது போக்குவரத்து விதி மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் போக்குவரத்து விதி மீறிய 3,021 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 100 நாட்கள் காசநோய் கண்டறியும் முகாம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், பழங்குடியினர் & ஊட்டச்சத்து குறைவு உள்ளவர்களுக்கு காசநோய் பரிசோதனை மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(disa.07) தெரிவித்தார்.
கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில் காலை 10 மணிக்கு சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை கொடைவிழாவையொட்டி மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வடக்கு குண்டல் நாராயணசாமி கோயிலில் மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு இரவு 7 மணிக்கு அய்யா பவனி ஆகியவனை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு இந்த ரப்பர் அனுப்பப்பட்டு வரும் நிலையில், சரிவில் இருந்த ரப்பர் விலை படிப்படியாக உயர்ந்து (100 கிலோ) கடந்த 4ம் தேதி 19900 ரூபாயாக இருந்தது. ரப்பர் விலை தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று ரப்பர் விலை 19,600 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 300 ரூபாய் விலை குறைந்துள்ளது.
நட்டாலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பேரூராட்சி பணியாளர். இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் கடனாக வாங்கி செக் கொடுத்து மோசடி செய்ததாக, குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ் நிரபராதி என இன்று (டிச.7) தேதி தீர்ப்பளித்தார்.
குமரியில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை என whatsapp எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பி ஒரு கும்பல் பலரிடம் மோசடி செய்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரை நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் இன்ஜினியர், மருத்துவரிடம் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் கோவாவில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் கொடி நாள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார். கடந்த ஆண்டு 1,017 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு 2 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று கூறினார். இந்த ஆண்டும் அதிக வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் வருகிறது. இன்று காலை 42 பெட்டிகளில் 2,600 டன் ரேசன் அரிசி தெலுங்கானாவில் இருந்து நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் இருந்து அரிசி இறக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.
வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்துபால், உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் அதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.