Kanyakumari

News December 13, 2024

குமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர் முகாம்

image

குமரி ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் நாளை (டிச.14) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

குமரியல் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் முகாம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு டிச.,17 ம் தேதி பிற்பகல் 3.00 மணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஊரகப்பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

சில்லறை வியாபார நிறுவனங்கள் குறித்து எம்.பி அறிக்கை

image

“நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என” பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளதாக இன்று (டிச. 13)கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 13, 2024

செல்வ பெருந்தகை குமரி வருகை திடீர் ரத்து!

image

குழித்துறையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வருகிற 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைக்க இருந்தது. இந்நிலையில், தற்போது வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாலும், போதிய விமான சேவை இல்லாததாலும் இந்த திறப்பு விழாவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் இன்று(13ம் தேதி) தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு

image

குமரி மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விருப்ப மாறுதல் வழங்கப்படும் என்றும், ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் பணி மாறுதல் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

குமரியில் திருமண பதிவு மூலம் ரூ.33,56,018 வருவாய்!

image

பத்திரப்பதிவுத்துறை கீழ் இயங்கும் நாகர்கோவில் பதிவு மாவட்டத்தில் வடசேரி, இடலாக்குடி, மண்வாளக்குறிச்சி உட்பட 12 சார்பதிவகங்கள் இயங்குகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் இந்து திருமணம், சிறப்பு திருமணம், தமிழ்நாடு திருமணங்கள்படி திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. இதன் மூலம் 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை ரூ.33,56,018 வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நேற்று(டிச.,12) கூறினர்.

News December 13, 2024

ஆலன் பிலாவடியில் 300 ஏக்கரில் முல்லை பூங்கா – ஆய்வு

image

சுருளகோடு ஊராட்சியில் ஆலன் பிலாவடியில் 300 ஏக்கர் நிலத்தில் 2 கோடி ரூபாய் செலவில் முல்லை பூங்கா அமைக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதற்கான இடம் அளவிடும் பணி நேற்று நடைபெற்றது. இதனை சுருளகோடுஊராட்சி மன்ற தலைவர் விமலா சுரேஷ் பார்வையிட்டார். இதில் வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 13, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,13) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசர் நம்பர் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 17வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. #காலை 10 மணிகு குலசேகரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க வலியுறுத்தி குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் CPIM சார்பில் தர்ணா போராட்டம் நடக்கிறது.

News December 13, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,13) காலை 10 மணிக்கு வீட்டு வரி உயர்வை கண்டித்து பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு மீனவர் கூட்டுறவு சங்கம், பனைவெல்ல கூட்டுறவு, சங்க நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படியான ஊதியத்தை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News December 13, 2024

நாளை நடைபெறவிருந்த திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு

image

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நாளை(டிச.,14) நடைபெற இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. நாளை காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!