India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 414 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 102 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 653 கன அடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
#இன்று(டிச.,12) காலை 9 மணி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தாமரையூர் ஐயா பதியில் அய்யா வழி ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்; 9.20 மணிக்குசாமி தோப்பு தலைமை பதியில் தரிசனம் செய்கிறார்; 9:30 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பங்கேற்கிறார். #காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் ரப்பர் தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கோரி 16வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே இன்று(டிச.11) நடுக்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு கப்பல் மோதியதில் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. மூழ்கிய விசைப்படகில் தத்தளித்த 11 மீனவர்களை காப்பாற்றும் முயற்சியில் சக மீனவர்கள் 3 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும். எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் முன்மொழிந்துள்ளார்.
கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண் காப்பீட்டு நிறுவன ரப்பர் வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேரலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.608 செலுத்தினால் இழப்பீட்டுத் தொகையாக ரூ.12,146 தொகையாக அளவில் அதிகப்படியான மழை, வெப்பநிலையை பொறுத்து இந்திய வானிலை மையத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். Apply செய்ய கடைசி நாள்: டிச.,14.
குமரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது, 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் இந்து கல்லூரி மைதானத்தில் டிச.,15 காலை 7 மணிக்கு நடக்கிறது. 1.9.1999-க்குப் பின் பிறந்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வரலாம். மேலும் தொடர்புக்கு: 9944 496677.
இன்று(டிச.,11) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தி 15வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#காலை 10 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆறான் விளை ஊர் பொதுமக்கள் சார்பில் IREL சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தோவாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இறச்சகுளம் அருள்ஞானபுரம் பகுதியில், தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அம்பேத்கரின் 9 அடி உயர வெங்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கான அழைப்பிதழை தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் நேற்று(டிச.,10) சென்னையில் எடப்பாடி பழனிசாமியை வழங்கினார். இந்நிகழ்வில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மும்பையைச் சேர்ந்த பிரணவ் ராவுத்(40), ஜூடூ டிசோசா(67) சச்சின் கவுலி(41) ஆகிய 3 பேர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி காஷ்மீர் லால் சவுக் பகுதியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாப், அரியானா, டெல்லி உள்பட 12 மாநிலங்கள் வழியாக 3750 கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் இன்று(டிச.10) கன்னியாகுமரி வந்து தங்களது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.