India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் கீழமறன் குடியிருப்பை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் என்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கிரிக்கெட் விளையாட சென்ற இவரை 18 வயதிற்குட்பட்ட 4 பேர் கொண்ட கும்பல் பீர்பாட்டிலால் தலையில் அடித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் 4 பேரையும் போலீசார் தேடி வரும் நிலையில் முதற்கட்ட விசாரனையில் தோழியை கிண்டல் செய்ததால் தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று (ஏப்.07) 1 கிலோ பிச்சி ரூ.1100, மல்லி ரூ.650, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.300, வாடாமல்லி ரூ.60, கிரேந்தி ரூ.70 கோழிக்கொண்டை ரூ.60, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.140, மஞ்சள் செவ்வந்தி ரூ.220, வெள்ளை செவ்வந்தி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.70, தெத்தி ரூ.80 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 – முதல் மே 4 வரை ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ரயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்தும் (வ. எண்.06012), தாம்பரத்தில் இருந்து(வ. எண்.06011) திங்கட்கிழமையும் இயக்கப்பட உள்ளது. கோடை விடுமுறையில் இது சென்னை செல்வோருக்கு பயனுள்ளதாக அமையும்.

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.7) 30.25 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.76 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.85 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 51 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 105 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே நெல்லி விளையைச் சேர்ந்தவர் டைட்டஸ் (58). டீக்கடை நடத்தி வரும் இவர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு வரும் மின் ஒயரில் இணைத்து வைக்கப்பட்டிருந்த கம்பியில் கைபட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி, முப்பந்தலில் அமைந்துள்ளது அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில். நினைத்ததை வேண்டி பித்தளை, வெண்கலம் , வெள்ளி போன்ற உலோகங்களால் ஆனா உடல் உருவத்தை நேர்த்திக்கடனாக செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் இங்கு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, நீண்ட நாள் உடல் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்கள்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நாகர்கோவில், தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய 3 இடங்களில் நேற்று (ஏப் 5) நடைபெற்றது. இந்த முகாமில் நாகர்கோவிலில் 114 மனுக்களும், குழித்துறையில் 44 மனுக்களும், தக்கலையில் 72 மனுக்களும் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.