India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த முறைகேடு விவகாரத்தில் கைதாகிவுள்ள 2 பெண்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை, கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் குறித்த சுவரொட்டிகளை காவல்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து வருகிறது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பால் பூத்திலும் இது வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.16) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி வழங்கப்பட்ட 369 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
குமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விபத்துகள் மற்றும் உயிர்பலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1431 வழக்குகள் நடந்துள்ளன இதில் 334 பேர் பலியாகி உள்ளனர் ஆனால் இந்த ஆண்டு விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது 260 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான 24.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் கடந்த ஆண்டு அதிகளவு விபத்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 334 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இது அதிகபட்சமாகும். குறைந்தபட்சமாக 2020 ஆம் ஆண்டு 102 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
#இன்று(டிச.,160 காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் CPIML Liberation சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு மார்த்தாண்டத்தில் பாஜக சார்பில் சாலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
#இன்று(டிச.,16) காலை 8 மணிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்த நிலையில், அவரது உறவினர்கள் ஐஎம்சியு வார்டு கதவு கண்ணாடியை உடைத்து பிரச்னையில் ஈடுபட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவர்கள் மாவட்ட சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம்.#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசுரப்பர் தொழிலாளர்கள் போராட்டம்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு அலுவலகத்தில் தற்காலிக உதவியாளர் சகிலா மற்றும் சகாய ஜென்சி,ஆலிஸ் பிரைட் ஆகியோர் சேர்ந்து 69 நபர்களிடம் ரூ.70 லட்சம் வாங்கிக் கொண்டு போலி கையெழுத்து மூலம் வீடு ஒதுக்கீடு வழங்கி அவர்களை குடியமர்த்தி மோசடி செய்துள்ளனர். இதை அறிந்த உதவி நிர்வாக பொறியாளர் ராஜகோபால் கொடுத்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் ஷகிலா, சகாய ஜென்சி ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை சகோதரர் சுகம் கத்பட் 6 நாட்களுக்கு முன் பஹ்ரைன் நாட்டில் வைத்து உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் நாகர்கோவில் திருஇருதய ஆலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (டிச.17) மாலை 3.00 மணி நல்லடக்க திருப்பலி நடைபெறும். அதைத்தொடர்ந்து நல்லடக்கம் ஜேக்கப் ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள அசிசி கல்லறை தோட்டத்தில் வைத்து நடைபெறும் என எம்.எல்.ஏ தாரகை அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.