Kanyakumari

News April 18, 2025

குமரியில் ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு

image

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நாகர்கோவில் சார்பில் நிர்வாக பொறியாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ரூ.2,50,000 தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 1000 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

News April 18, 2025

வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

image

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 17, 2025

குமரியில் ரூ.15 ஆயிரத்தில் வேலை

image

தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்பு திட்டத்தில் மாவட்ட மருந்தாளுநர் பணிக்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு டிகிரி கட்டாயம். சம்பளம் ரூ.15 ஆயிரம். 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். துணை இயக்குநர் மருத்துவப் பணிகள், மாவட்ட காசநோய் மையம்,குமரி அரசு மருத்துவ கல்லூரி,ஆசாரிபள்ளம் என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை ஏப்.30க்குள் அனுப்ப வேண்டும்

News April 17, 2025

மார்ச்.24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து மார்ச் 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2025

மகளிர் சுய உதவிக் குழுக்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரக நகர் புற வாழ்வாதார இயக்க அளவில் வரும் 30ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

News April 17, 2025

தனித்துவ அடையாள எண் காலக்கெடு நீட்டிப்பு

image

குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

கன்னியாகுமரி மாவட்ட உதவி எண்கள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,ஆட்சியர் அலுவலகம் : 04652 – 279090,279091, காவல் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு -1091 என்ற உதவி எண்களில் அழைக்கலாம்.

News April 17, 2025

குமரி எலக்ட்ரீஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை

image

கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

News April 16, 2025

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை

image

சுதந்திரப் போராட்ட தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்சல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியுமாக விளங்கிய பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில்ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அவரது நூற்றாண்டைய ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News April 16, 2025

குமரி மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!