India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் 1.04.2025 தொடங்கி 8.06.2025 வரை 5 கட்டங்களாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 04652 – 262060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார். *தேவைபடுவோருக்கு பகிரவும்*
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “மாவட்டத்தில் 490 கோவில்கள் உள்ளன; இதில் 250 கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது; 83 கோயில்களுக்கு பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது; 50 கோவில்கள் புனரமைக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது; நாகராஜா கோவில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது விரைவில் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
குமரி மாவட்டத்தில் வீடுகள், தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மூலம் 3.25 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 679 இடங்களில் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில் குமரியில் தற்போது சூரிய ஒளி மூலமும் மின் உற்பத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 45,000 க்கும் மேற்பட்டோர் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் இன்று வெளியிட்ட பாஜக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மங்களூர் சென்ட்ரல் – கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இம்மாதம் 28ஆம் தேதி திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் 29ஆம் தேதி கன்னியாகுமரி – மங்களூர் பரசுராம் ரயில் கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 26) 28.89 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 71 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று(மார்ச் 25) வெளியிட்ட செய்தி குறிப்பில், இம்மாதம் 28ஆம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் மீனவர்கள், அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனியாக மனுக்கள் வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.
#இன்று(மார்ச் 26) காலை 10 மணிக்கு ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலி 730 ரூபாய் வழங்க கேட்டு குளச்சல் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.#காலை 10க்கு மணி தக்கலை திருமண மண்டபத்தில் சிபிஐஎம்எல் ‘Mass line’ மாநாடு.#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று குமரியில் கால்வாய்களை சீரமைக்க ரூ.13.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதில் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையாளர் தங்கம், மேலாளர் ஆனந்த், ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் நேற்று(மார்ச்.25) திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 153 வசூலாகியிருந்ததாக தகவல். இது தவிர 4.5 கிராம் தங்கம், 32.950 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் இருந்தன.
Sorry, no posts matched your criteria.