India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக நாகர்கோவில், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் திட்டுவிளை போன்ற பல பகுதிகளில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் இந்த வாசகமும், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, பெரியார், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்காக தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி – மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் – ஆர்டிஓ காளீஸ்வரி, குளச்சல் – ஆதி திராவிடர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் -சப் கலெக்டர் வினை குமார் மீனா, விளவங்கோடு – பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் செந்தூரான், கிள்ளியூர் – ஆயம் உதவி ஆணையர் ஈஸ்வர நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்காக தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி – மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் – ஆர்டிஓ காளீஸ்வரி, குளச்சல் – ஆதி திராவிடர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் -சப் கலெக்டர் வினை குமார் மீனா, விளவங்கோடு – பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் செந்தூரான், கிள்ளியூர் – ஆயம் உதவி ஆணையர் ஈஸ்வர நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் தினத்தை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.

வடசேரி பாலு(29) சென்னையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு இவரது சகோதரர் இறந்து விட்டார். அக்.25.ம் தேதி சகோதரரின் நினைவு தினத்துக்கு பாலு வடசேரி வந்தார்.அக். 30.ம் தேதி இரவு தூங்கச்சென்ற பாலுவின் அறை நேற்று காலை திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது மின் விசிறியில் பாலு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2569 Junior Engineers, Depot Material Superintendent, Chemical & Metallurgical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட டிப்ளமோ, B.Sc degree முடித்தவர்கள் நவ. 30க்குள் <

சின்னணைந்தான்விளையைச்சேர்ந்த சலூன்கடை நடத்தி வரும் ஆனந்த குமாருக்கும் (31), அவரது மனைவி அஜிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் வேதனையடைந்த ஆனந்தகுமார் அக்.30 மாலை தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் கூறினர். சுசீந்திரம் போலீசார் விசாரணை.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் நவ.3,4,6 தேதிகளில் ரேஷன்கடை விற்பனையாளர்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்குவார்கள்.
Sorry, no posts matched your criteria.