India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் டிச.31ம் தேதி திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழாச் சிறப்பு மலர் வெளியீடு.*தினம் ஒரு திருக்குறள் நூல் புதிய பதிப்பு வெளியீடு*திருவள்ளுவர் சிலை திறப்பு*திருக்குறள் கண்காட்சி தொடங்குதல்*திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல்*திருவள்ளுவர் சாலை பெயர் சூட்டல்*நாதசுவரம் திருக்குறள் இசை *மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.
குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன்படி, நிகழ்வின் இரண்டாம் நாளான டிச.31 திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியிடுதல்! திருவள்ளுவர் பசுமை பூங்கா திறந்து வைத்தல்! திருவள்ளுவர் சிலை தோரண வாயில் அடிக்கல் நாட்டுதல்! திருவள்ளுவர் சாலை பெயர் சூட்டுதல்! மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி தாம்பரத்திலிருந்து குமரிக்கும், குமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதன்படி இதற்கான முன்பதிவு நாளை(டிச.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தாம்பரத்திலிருந்து இம்மாதம் 24 மற்றும் 31-ஆம் தேதிகளிலும், குமரியில் இருந்து 25 மற்றும் ஜனவரி 1ம் தேதியிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி – பானராஸ் கும்பமேளா சிறப்பு ரயில் ஜனவரி மாதம் கன்னியாகுமரியில் இருந்து 6 மற்றும் 20 ஆம் தேதியும், பனராசில் இருந்து 9 & 23ஆம் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர், நெல்லூர், கம்மம், ஜபல்பூர் வழியாக இந்த ரயில் செல்லும் செல்லும். முன்பதிவு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போட்டியில் முளகுமூடு வேநாடு அகாடமி மாணவர்கள் 5 பேர் வெள்ளிபதக்கமும், 2 பேர் வெண்கலப்பதக்கமும் பெற்று மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கௌரவ ஆலோசகர் டொமினிக் எம்.கடாட்சதாஸ், கௌரவ தலைவர் கிறிஸ்துதாஸ் ஆசான், தலைவர் லெனின் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
குமரி அம்மமுத்து 1991 – 96ல் அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 2010-ல் நெல்லை IOB வங்கி மேலாளர் உடந்தையுடன் ரூ.2,42,37,431 கடன் பெற்று மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இது தொடர்பாக மேலாளர், அம்மமுத்து உட்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று மதுரை சிபிஐ கோர்ட் அம்மமுத்து உட்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை, ஒருவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா டிச.,22, 23 தேதிகளில் நடக்கிறது. 22-ம் தேதி கல்லூரி, திருச்சபை மாணவ மாணவிகள் பங்கு பெறும் குழுபாடல் போட்டி நடக்கிறது. 23-ம் தேதி நெடிய சாலை முதல் அருமனை வரை கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அணிவகுப்பு, மேளதாளத்துடன் ஊர்வலம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் நடக்கிறது. தொடர்ந்து பிரமுகர்கள் பங்கேற்கும் சமூகநல்லிணக்க மாநாடு நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று(டிச.,20) நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யா வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டு சீர் வரிசைகளை வழங்கினர். தொடர்ந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில், மேலும் ஒரு மைல் கல்லான கடல் நடுவே கண்ணாடி பாலம் வேலை இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. எந்த தருணத்திலும் திருவள்ளுவர் சிலையை தடையின்றி பார்க்கும் விதமாக, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கனவான விவேகானந்தர் பாறைக்கும் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் பணிகள் முடிவடையும் நிலையில், அதன் அழகிய தோற்றம் வெளியாகி உள்ளது. SHARE IT.
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உருவப் பொம்மையை எரித்ததாக, விசிக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தாஸ், வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் ஜானி, தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான் அசூன் உட்பட 10 பேர் மீது பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் நேற்று(டிசம்பர் 20) வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.