India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி அருகே இன்று(டிச.25) 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். ஈத்தங்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு வெவ்வேறு வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சையில் உள்ளார். தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார், விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாஜக புதிய மண்டல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தோவாளை மேற்கு – கோலப்பன், தோவாளை கிழக்கு பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் வடக்கு – அருள் சிவா, அகஸ்தீஸ்வரம் தெற்கு – அமுஜா சிவா, ராஜாக்கமங்கலம் கிழக்கு – ராஜேஷ், ராஜாக்கமங்கலம் மேற்கு – சிவகுமார், நாகர்கோவில் கிழக்கு சிவசுதன், குருந்தன் கோடு கிழக்கு – ரமேஷ் குருந்தன்கோடு மேற்கு – பிரமோத் குளச்சல் சதீஷ் பாரதி.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “கிள்ளியூர் தாலுகா 4 கிராமங்களில் 1144 ஹெக்டர் நிலத்தில் அணு கனிமங்களை பிரித்தெடுக்க மணவாளக்குறிச்சி இந்திய மணல் ஆலை 2 கிமீ சுற்றளவில் 40 அடி ஆழம் மணலை தோண்டி எடுத்துள்ளது. ஆலையை மூட பொதுமக்கள் போராடி வருகின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றுள்ளார்.
கன்னியாகுமரி – ஹவுரா ரயில்(டிச.28), குருவாயூர் – சென்னை (டிச.27,30) நாகர்கோவில் – கட்சே குடா(டிச.28), நாகர்கோவில் – கோவை(டிச.28,31) கோவை – நாகர்கோவில்(28,31), நாகர்கோவில் – மும்பை(31), பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கம்(29) ஆகிய ரயில்கள் உட்பட 12 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில்கள் வழக்கமான பாதையில் செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
#இன்று(டிச.25) காலை 11 மணிக்கு அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோவிலில் மண்டலகால விழாவையொட்டி களபாபிஷேகம். இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம். 7.30 மணிக்கு திருவாதிரை நடனம். #மதியம் 2.30 மணிக்கு குலசேகரம் மலவிளை ஆதிபெந்தெ கொஸ்தே சத்தியசபையில் கிறிஸ்துமஸ் ஆராதனை. # மதியம் 2.30 மணிக்கு மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷனில் நாட்டியாஞ்சலி. மாலை 3 மணிக்கு சத்சங்கம். மாலை 5.45-க்கு நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.
#இன்று(டிச.25) காலை 10 மணிக்கு தர்மபுரம் ஊராட்சி தலைவர் & அதிகாரிகள் மீது பொய் பிரச்சாரம் செய்து வரும் CPIM கட்சியை கண்டித்து ஈத்தாமொழி சந்திப்பு முதல் அத்திக்கடை சந்திப்பு வரை வாகன பிரச்சாரம். #காலை 6 to மாலை 4 மணி வரை புதுக்கடை காஞ்சனா ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி கோவில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் மேற்கு மாவட்ட பண்பு பயிற்சி முகாம்.#காலை 11 மணிக்கு பாமக மணிக்கு அன்புமணி ராமதாஸ் குமரி வருகிறார்.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.2,400-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.1,350-க்கும் விற்பனையானது. அதேபோன்று வண்ண வண்ண பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ்(ஒரு கட்டு) ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.150, சிவப்பு கிரேந்தி ரூ.200, சிவந்தி மஞ்சள் ரூ.150 விற்பனை செய்யப்படுவதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் இன்று மாலை 5 மணி அளவில் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விழா நிகழ்ச்சிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் திருவள்ளுவர் சிலை கூண்டு பாலம் பணியை பார்வையிடுவதுடன், விழா நடைபெறும் மேடை மற்றும் பந்தல் அமைப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.
#இன்று(டிச.24) காலை 10 மணிக்கு, எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். மாவட்டத்தில் 25 இடங்களில் MGR படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்படுகிறது. #10:30 மணிக்கு ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து பலரும் மரியாதை செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.