India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா டிச.,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி குமரியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பழுது நீக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் திருவள்ளுவர் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனை சாவடியில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் பணியில் இருந்தார். அப்போது வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் ஹோட்டல் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ஜெனிஸ் மற்றும் வாகனத்தில் இருந்த அபய குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வாகன உரிமையாளர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து உணவு மற்றும் கோழி கழிவுகள் குமரி மாவட்டம் வருவதை தடுக்க SP சுந்தரவதனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையும் மீறி குமரிக்குள் கேரள கழிவுகள் வந்தால், சம்பந்தப்பட்ட சோதனை சாவடி அதிகாரி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று SP அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#இன்று(டிச.,20) காலை 10 மணிக்கு பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊராட்சித் தலைவி உட்பட 8 பேரை கைது செய்ய வலியுறுத்தி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு நாதக சார்பில் ஆர்ப்பாட்டம்.
#மாலை 4.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து தக்கலை தபால் நிலையம் முன்பு காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
#மாலை 5.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
சுசீந்திரம் திருக்கோவில் சாலை முன்பு CITU கோவில் ஆலய ஊழியர் சங்கத்தினர் காலை 10 மணி முதல், அரசு ஆணைப்படி ஊதியம் வழங்கக் கேட்டு தொடர் தர்ணா போராட்டம், திருவட்டாறு எக்செல் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டத்தில் மதியம் 1.30 மணிக்கு கலை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு இசை கச்சேரி, கரவிளாகம் கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேகத்தையொட்டி இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சுவாமி பவனி ஆகியன நடைபெறும்.
அஞ்சுகிராமம் பால்குளம் அரசு குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வருபவர் மாரிமுத்து (35). மனைவி மரியசந்தியா இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்றிரவு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்,இதில் மனைவியின் உடல் பாகத்தை துண்டு துண்டாக வெட்டி வெளியே வீச சென்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார், போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்கிறது. ஆனால் இந்த ரயில் இன்று (டிச.19) 5 மணி 35 நிமிடம் தாமதமாக இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் காலதாமதமாக வந்து பராமரிப்பு பணி காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை நடத்துவதற்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிச.19) தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12:15 க்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12:35 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில் செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.
“முதல்வர் மு.க ஸ்டாலின் டிச.30 மதியம் குமரி வருகிறார். நெடுஞ்சாலை துறை சார்பில் கண்ணாடி கூண்டு பாலத்தினை திறந்து வைத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து சுற்றுலாத் துறை சார்பில் பூம்புகார் படகுத்துறையில் அமைந்துள்ள ஒளி மற்றும் ஒளி காட்சிக்கூடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். 31ஆம் தேதி திருவள்ளுவர் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்” என அமைச்சர் எ.வ வேலு கூறினார்
Sorry, no posts matched your criteria.