India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#இன்று(டிச.25) காலை 11 மணிக்கு அளப்பன்கோடு ஈஸ்வரகால பூதத்தான் கோவிலில் மண்டலகால விழாவையொட்டி களபாபிஷேகம். இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம். 7.30 மணிக்கு திருவாதிரை நடனம். #மதியம் 2.30 மணிக்கு குலசேகரம் மலவிளை ஆதிபெந்தெ கொஸ்தே சத்தியசபையில் கிறிஸ்துமஸ் ஆராதனை. # மதியம் 2.30 மணிக்கு மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷனில் நாட்டியாஞ்சலி. மாலை 3 மணிக்கு சத்சங்கம். மாலை 5.45-க்கு நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.
#இன்று(டிச.25) காலை 10 மணிக்கு தர்மபுரம் ஊராட்சி தலைவர் & அதிகாரிகள் மீது பொய் பிரச்சாரம் செய்து வரும் CPIM கட்சியை கண்டித்து ஈத்தாமொழி சந்திப்பு முதல் அத்திக்கடை சந்திப்பு வரை வாகன பிரச்சாரம். #காலை 6 to மாலை 4 மணி வரை புதுக்கடை காஞ்சனா ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி கோவில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் மேற்கு மாவட்ட பண்பு பயிற்சி முகாம்.#காலை 11 மணிக்கு பாமக மணிக்கு அன்புமணி ராமதாஸ் குமரி வருகிறார்.
கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.2,400-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.1,350-க்கும் விற்பனையானது. அதேபோன்று வண்ண வண்ண பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ்(ஒரு கட்டு) ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.150, சிவப்பு கிரேந்தி ரூ.200, சிவந்தி மஞ்சள் ரூ.150 விற்பனை செய்யப்படுவதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் இன்று மாலை 5 மணி அளவில் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விழா நிகழ்ச்சிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் திருவள்ளுவர் சிலை கூண்டு பாலம் பணியை பார்வையிடுவதுடன், விழா நடைபெறும் மேடை மற்றும் பந்தல் அமைப்பு பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.
#இன்று(டிச.24) காலை 10 மணிக்கு, எம்ஜிஆரின் 37-வது நினைவு நாளையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். மாவட்டத்தில் 25 இடங்களில் MGR படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்படுகிறது. #10:30 மணிக்கு ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து பலரும் மரியாதை செய்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான இன்று(டிச.,24) மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்க வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் சனிக்கிழமை(டிச.,28) அன்று வேலை நாளாக இருக்கும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#இன்று(டிச.,24) காலை 11 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அமைச்சர் அமைச்சவையை கண்டித்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.#காலை 11.15 மணிக்கு டெரிக் சந்திப்பில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். #காலை 11.30 மணிக்கு அமித்ஷா மீது நடவடிக்கை எடுத்து கேட்டு ஆட்சியரிடம் காங்., கட்சியினர் மனு அளிக்கின்றனர்.
தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கும் அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தாம்பரம் – நாகர்கோவில் (20691) அந்தியோதயா அதி விரைவு ரயிலின் நேரம் மாற்றப்படுகிறது. அதன்படி இரவு 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (டிச.23) நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் திர.ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “குறிப்பில் எம்.ஜி.ஆரின் 37 ஆவது நினைவு தினத்தை ஒட்டி, நாளை 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தக்கலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது; இதில், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.