India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழில் தொடங்க வங்கி நேரடிக் கடன் வழங்கும் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் குமரியில் 8,333 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.674,28,76,000 நிதியும், நடப்பு நிதி ஆண்டில் 9,096 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.671,11,15,000 நிதியும் வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் 17,429 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,345 கோடி வங்கி நேரடிக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக மகளிர் திட்ட அதிகாரிகள் நேற்று(டிச.24) கூறினர்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 3ஆம் நாள் நிகழ்ச்சி ஜனவரி 1ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு உலக அளவில் வெற்றி பெற்றவர்களை சிறப்பிக்கும் வகையில் கௌரவிக்கும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2ஆம் நாள் நிகழ்ச்சி 31ஆம் தேதி நடைபெறுகிறது. #அன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலை வள்ளி விழா மலரை வெளியிடுகிறார். தொடர்ந்து, முடிவுற்ற பணிகளை துவக்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். #பிற்பகல் 11:30 மணிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. #மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் நேற்று(டிச.24) இரவு லாயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர். அவர்களை விரட்டி பிடித்தபோது, சாக்கு முட்டையை கீழே போட்டுவிட்டு தப்பினர். அதை திறந்து பார்த்தபோது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள 5.690 கிலோ திமிங்கல உமிழ்நீர் இருந்தது. போலீசார் அவற்றை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 30ஆம் தேதி தொடங்குகிறது. #அன்று மாலை 6 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரையிலான கண்ணாடி நடை பாலத்தை திறந்து வைக்கிறார். #இரவு 7 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சுகிசிவம் குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி அருகே இன்று(டிச.25) 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். ஈத்தங்காடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், ஒரு வெவ்வேறு வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சையில் உள்ளார். தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார், விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பாஜக புதிய மண்டல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தோவாளை மேற்கு – கோலப்பன், தோவாளை கிழக்கு பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் வடக்கு – அருள் சிவா, அகஸ்தீஸ்வரம் தெற்கு – அமுஜா சிவா, ராஜாக்கமங்கலம் கிழக்கு – ராஜேஷ், ராஜாக்கமங்கலம் மேற்கு – சிவகுமார், நாகர்கோவில் கிழக்கு சிவசுதன், குருந்தன் கோடு கிழக்கு – ரமேஷ் குருந்தன்கோடு மேற்கு – பிரமோத் குளச்சல் சதீஷ் பாரதி.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “கிள்ளியூர் தாலுகா 4 கிராமங்களில் 1144 ஹெக்டர் நிலத்தில் அணு கனிமங்களை பிரித்தெடுக்க மணவாளக்குறிச்சி இந்திய மணல் ஆலை 2 கிமீ சுற்றளவில் 40 அடி ஆழம் மணலை தோண்டி எடுத்துள்ளது. ஆலையை மூட பொதுமக்கள் போராடி வருகின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றுள்ளார்.
கன்னியாகுமரி – ஹவுரா ரயில்(டிச.28), குருவாயூர் – சென்னை (டிச.27,30) நாகர்கோவில் – கட்சே குடா(டிச.28), நாகர்கோவில் – கோவை(டிச.28,31) கோவை – நாகர்கோவில்(28,31), நாகர்கோவில் – மும்பை(31), பனாரஸ் – கன்னியாகுமரி காசி தமிழ் சங்கம்(29) ஆகிய ரயில்கள் உட்பட 12 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ரயில்கள் வழக்கமான பாதையில் செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.