India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 3 நாள் நடக்கிறது. முதல் நாளான டிச.30 அன்று இரவு 7 மணிக்கு நடைபெறம் பட்டிமன்றத்தில், சுகிசிவம் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்துகிறார். ராஜாராம், மோகனசுந்தரம், மதுவூர் ராமலிங்கம், புலவர் சண்முக வடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர் மலைகளின் மேல் உச்சிப் பகுதியில், கிழக்கு திசை ஈரக்காற்று மோதி நாளை(டிச.28) மேக கூட்டங்கள் உருவாக சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான சாரல் மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது.
#இன்று(டிச.27) காலை 6 மணிக்கு கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள சேவா பாரதிக்கு சொந்தமான இல்லத்தில் ஆர்எஸ்எஸ் மகளிர் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு இடலாக்குடி சந்தி தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தி கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 28வது நாளாக உண்ணாவிரதம் நடக்கிறது.
பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை(டிச.27) காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தொடங்கி வைக்கிறார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்கிறார்கள்.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னியாகுமரியில் டிச.30, 31, ஜனவரி, 1 ஆகிய மூன்று தினங்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெறுகிறது. 31ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அழைப்பிதழ்களில் அவர்கள் பெயர் போடப்பட்டுள்ளது.
100 வது ஆண்டில் நுழையும் தோழர் நல்லகண்ணுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது சமூக சேவையும், அக்கறையும் போற்றுவதற்கு உரியது.
ஒடுக்கபட்டவர்களுக்கும், நலிவடைந்த மக்களுக்கும் அவர் மேற்கொண்ட போராட்டங்கள் அவரை மிகச்சிறந்த போராளியாக சரித்திரம் பேசும்.
அவருக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துக்கள். என்ன குமரி எம். பி விஜய் வசந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்
குமரி, நெல்லையில் கொட்டப்படும் கேரள கழிவு தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சி அனுமதிபெற்ற ‘சன் ஏஜ் எக்கோ சிஸ்டம்’ நிறுவனம் திருவனந்தபுரம் ஆர்.சி.சி, 2 தனியார் ஆஸ்பத்திரி கழிவுகளை சிமெண்ட் ஆலைக்கு வழங்க ஒப்பந்தம் போட்டு, அவற்றை குமரி, நெல்லைக்கு கொண்டு வந்து கொட்டுவதா அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதனை ரத்து செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குமரியை சேர்ந்த 19 வயது மாணவி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 2ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். இவர், கடந்த 23-ம் தேதி இரவு 3ஆம் ஆண்டு படிக்கும் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கொட்டூர்புரம் பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
கடியப்பட்டணத்தைச் சேர்ந்தவர் ஆர்லின்டேவிட்சன்(15). இவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இவனும் இவனது நண்பர்களும் நேற்று(டிச.25) கடலில் குளிக்கச் சென்றனர். கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை கடல் அலை இழுத்தது. அலையில் சிக்கிய அவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். அதில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டனர். ஆர்லின் டேவிட்சன் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்.
திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு நாளை (26.12.2024) காலை 8.00 மணிக்கு விழிப்புணர்வு வாகன கலை பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் தொடங்கி வைத்து விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.