Kanchipuram

News November 16, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.16) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன்படி, இருங்காட்டுக்கோட்டை, ஓரிக்கை, பிள்ளைப்பாக்கம் ஆகிய துணை மின் நிலையங்களின் கீழ் மின் விநியோகிக்கப்படும் கிராமங்கள் மற்றும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். இந்த அறிவிப்பை ஏற்று, சார்ஜ் போடுவது, சமையல் வேலைகளை முடிப்பது என தங்கள் வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News November 15, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 15, 2024

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் டிஜிட்டல் முறை

image

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.15) முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகள், செங்கல்பட்டில் உள்ள 89 கடைகள் என மொத்தம் 220 டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மது பாட்டிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். 

News November 15, 2024

காஞ்சிபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தென் தமிழகம் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (நவ.15) காஞ்சிபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.

News November 15, 2024

மின்சாரம் பாய்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

மாங்காடு, சீனிவாசா நகரில் உள்ள அங்காளம்மன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, மின் மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது. இதன் அருகே கடந்த 2ஆம் தேதி சென்ற சாந்தி என்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற சென்ற சசிகலா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாந்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிகலா வீடு திரும்பினார்.

News November 15, 2024

சனிக்கிழமைகளில் மட்டும் திடுடிய நபர் கைது 

image

குன்றத்தூர் மாங்காடு சுற்றுப்புறங்களில் சனிக்கிழமை நாட்களில் மட்டும் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு(33) என்பது தெரியவந்தது. இவர் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் திருடிய 22 சவரன் நகையை மாங்காடு போலீசார் மீட்டனர்.

News November 15, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் காஞ்சிபுரத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News November 15, 2024

நிலத்துக்கு அரசு வழங்கும் மிதிப்பு குறைவு: குமுறும் மக்கள்

image

வளத்தூர் கிராமத்தில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு அரசு அளிக்கும் மதிப்பை நிலம் உரிமையாளரிடம் விமான நிலையத் திட்ட நிலமெடுப்பு அதிகாரிகள் தெரியப்படுத்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்களில், நிலங்களின் உரிமையாளர்களிடம் அரசு வழங்கப்பட உள்ள நிலத்திற்கான மதிப்பு மிகவும் குறைவு என கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

News November 15, 2024

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று (14.11.2024) வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025க்கான அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜி.பிரகாஷ், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

குன்றத்தூரில் எலி மருந்தின் நெடி பரவி மகன், மகள் உயிரிழப்பு

image

குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன்(34), வீட்டில் எலி தொல்லை இருந்ததால், எலி மருந்து பயன்படுத்தியுள்ளார். வீட்டில், எலி மருந்தின் நெடி பரவி, கிரிதரனின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிதரனின் மகன், மகள் உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

error: Content is protected !!