India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாவட்ட மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செயலாளராக இருந்த நேரு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 3 ஆண்டுக்கு தலைவராக நீடிப்பார். இவருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
காஞ்சி மாநகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைக்கக்கூடாது என்று விவசாயிகள் சங்கம் சார்பில், சிறுகாவேரிபாக்கம் பகுதியில் நாளை (19-11-2024) காலை 10 மணி அளவில் B.D.O அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஓராண்டுக்கு சராசரியாக 3000-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2022-ல் ஜனவரி முதல் டிசம்பர் வரை 3,231 பேரும், 2023-ல் 3,632 பேரும், 2024 ஆகஸ்ட் வரை 1,350 பேரும் காஞ்சிபுரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், வரும் 26ம் தேதி டெண்டர் நடைபெற உள்ளது. டெண்டர் தொகையாக 50 லட்ச ரூபாயும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயும் விதிக்கப்பட்டது. உத்தரவாத தொகை அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்ததால் 50 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி டெண்டர் நடைபெறுவதாக வியாபாரிகள் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் ஏரிக்கரை மற்றும் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சம் பனை விதை நடவு விழா நேற்று (17.11.2024) தன்னார்வலர் சரண் தலைமையில் நடைபெற்றது. மேலும் வாலாஜாபாத் பேரூர் கவுன்சிலர் லயன் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதை நடவு விழாவில் பங்கேற்றார்.
குன்றத்துாரில் இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘யூனிக் பெஸ்ட் கன்ட்ரோல்’ நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அதன் அலுவலகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகள் ‘சீல்’ நேற்று வைத்துள்ளனர். பின்னர், “இம்மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். மருந்து வைக்கப்பட்டபின், வீட்டில் யாரும் தங்க வேண்டாம்” என அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய இன்று (நவ.17) 2ஆவது நாளாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க உள்ளிட்ட சேவைகளைப் பெற அப்பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல், நேற்று திறக்கப்பட்டு கோவில் செயல் அலுவலர் கேசவன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலையில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வாயிலாக எண்ணப்பட்டது. இதில், 21 லட்சத்து 60,633 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 1,077 கிராம் வெள்ளியும் என கோயிலுக்கு வருவாயாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
விதைகள் சுற்றுசூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 3 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4ஆவது ஆண்டில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. திருமுக்கூடல் செய்யாற்றங்கரையோரம், நேற்று (நவ.16) 5,000 பனை விதைகள் நடவு செய்து, 4ஆம் ஆண்டுக்கான நிறைவு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 இருசக்கர வாகனங்கல் மற்றும் 1 லாரி என 28 வாகனங்களும் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனத்தை ஏலம் எடுப்போர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.