Kanchipuram

News November 20, 2024

டாக்டர். அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

image

பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5.80 லட்சம் விருது தொகை. 2025ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர், விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/1 இணையதளத்தில் (அ) காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம் என அறிவிப்பு.

News November 19, 2024

ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி தற்கொலை

image

பரந்தூர் சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி திவ்யா கணபதி, நேற்று மாலை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய சுங்குவாசத்திரம் போலீசார், தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 19, 2024

தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி கோரி விண்ணப்பம்

image

தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

News November 19, 2024

கஞ்சா விற்பனை செய்த 3 ரவுடிகள் கைது

image

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த வசந்த் (28), காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (28), சிகாமணி (30) ஆகிய 3 ரவுடிகளையும் பிடித்து, ரூ.15,000 மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News November 19, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News November 19, 2024

அழிந்து வரும் மரங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 36.8 சதுர கி.மீ. மட்டுமே வனத்துறை உள்ளது. வருவாய் தரும் பனை மற்றும் ஈச்ச மரங்களை, ஏரிக்கரையோரத்தில் இருந்து வேருடன் வெட்டி, பிற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு, 10 மாதங்களில் மட்டும் 20,200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

News November 19, 2024

நடைபயிற்சிக்கு முற்றிலும் தடை

image

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், காலை 5:30 – 9:30 மற்றும் மாலை 5:00 – 8:00 மணி வரை, தினமும் 300க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், மைதானத்தில் வீராங்கனையரின் நலன் கருதி நடைபயிற்சி மேற்கொள்ள முற்றிலும் தடைவிதித்து விளையாட்டு துறை அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர். இதனால் நடைபயிற்சிக்கு வருவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News November 19, 2024

8,650 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள முதற்கட்ட முகாமாக கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,401 ஓட்டுச்சாவடிகளில் நடைபெற்றது. பெயர் சேர்க்க – படிவம் 6, பெயர் நீக்க – படிவம் 7 உள்ளிட்ட விண்ணப்பங்களை வழங்கினர். முதற்கட்டமாக நடந்த முகாமில், 15,297 பேர் மனு அளித்துள்ளனர். இதில், 8,650 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

News November 19, 2024

விற்பனையாளர்கள் பணி: விண்ணப்பம் தொடக்கம்

image

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காஞ்சிபுரத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 35 விற்பனையாளர்கள் பணிக்கான விண்ணப்பங்களை நேற்று (நவ.18) முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் டிச.5ஆம் தேதி வரை நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News November 19, 2024

மாநகராட்சி கூட்டத்துக்குகு முன்பே கையெழுத்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், மாதந்தோறும் மாநகராட்சி வளர்ச்சி குறித்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், மேயரின் ஆதரவாளர்கள் என்பதால் 51ஆவது வார்டு கவுன்சிலர் சங்கர், 44ஆவது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே வருகை பதிவு கையெழுத்திட்டு உள்ளதாக பிற கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

error: Content is protected !!