Kanchipuram

News November 24, 2024

புகையிலை வைத்திருந்த 5 கடைகளுக்கு சீல்

image

காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருக்காலிமேடு, சதாவரம், பங்காரு அம்மன் தோட்டம், கருக்கினிள் அமர்தவள் கோயில் தெரு மற்றும் கைலாசநாதர் கோயில் தெரு ஆகிய 5 இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததை கண்டுபிடித்து, அந்த கடைகளை மூடி சீல் வைக்கப்பட்டது.

News November 24, 2024

சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்க

image

உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது, அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும். முக்கிய UPI தரவு மற்றும் OTP-களை பகிர கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

News November 24, 2024

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

ATM மோசடி, டிஜிட்டல் கைது மோசடி வரிசையில் தற்போது UPI மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும், Amazon Pay-க்கு மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஷேர் செய்யுங்க

News November 24, 2024

காஞ்சிபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

வரும் நவ.26, 27 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அடுத்த வாரம் வடதமிழகத்தில் பருவமழை மீண்டும் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 24, 2024

way2news எதிரொலி

image

காஞ்சி மாநகராட்சி மிலிட்டரி ரோடு சிக்னல் அருகே உள்ள சாலை பக்க வாட்டில் வடிகால் கால்வாய் மேல் மூடி திறந்த நிலையில் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது என்று way2newsஇல் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால், வடிகால் கால்வாயின் மேல் மூடியை, புதர் மண்டி உள்ள இடத்தை சீர்செய்து பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்துள்ளனர்.

News November 23, 2024

ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

image

குன்றத்தூர் ஒன்றியம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் க.ஆர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பங்கேற்றனர்.

News November 23, 2024

குழந்தை நலக்குழுத் தலைவர், உறுப்பினர்கள் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கப்பட உள்ளன. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 இளைஞர் நீதி சட்டத்தின் அடிப்படையில், குழந்தை நலத்தில் 7 ஆண்டுகள் அனுபவமுள்ள 35-65 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் dsdcpimms.tn.gov.in என்ற இனையதளத்தில் கிடைக்கும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News November 23, 2024

3 மாதங்களில் மட்டும் 367 மாடுகள் பிடிக்கப்பட்டன

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தும் வகையிலும், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 367 மாடுகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பறிமுதல் செய்துள்ளன. இதன் காரணமாக, சாலையில் திரியும் மாடுகள் பெருமளவில் குறைந்துள்ளன. சுற்றித் திரிந்தால் புகார் அளியுங்கள்.

News November 23, 2024

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

மேஜர் முகுந்தன் பற்றி 2014ஆம் ஆண்டே வெளியான புத்தகம்

image

வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் ஊராட்சியில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியரான ஸ்ரீராம், 2014ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியின்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தன் பற்றி, ‘கண்ணீரும் தித்திக்கின்றதே’ என்ற தலைப்பில் 2014ஆம் ஆண்டில் கவிதை ஒன்றை எழுதினார். அதற்கு அப்போதே பலரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது அமரன் படத்தால் மீண்டும் அந்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

error: Content is protected !!