India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவலின்படி, பெண்கள் முன்னேற்றம் சார்ந்த அவ்வையார் விருது-2025 உலக மகளிர் தினத்தில் முதல்வரால் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 31.12.2024க்குள் https://awards.tn.gov.in இணையதளத்தில் 06.01.2025க்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி, கடந்த நவ.26 – 28 வரை சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கல்லூரி மாணவி வினிதா, 10,000மீ., 5,000மீ., ஓட்டப்பந்தய போட்டியிலும் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் காரணமாக, காஞ்சிபுரத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாங்காடு, படைப்பை, சுங்குவார்ச்சத்திரம், படைப்பை, ஸ்ரீபெரும்புதூர், திருப்புக்குழி, திருபுவனம், சிறுகாவேரிபாக்கம், மதுராமங்கலம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், சாலவாக்கம், அரும்புலியூர், தண்டலம், வல்லம் ஆகிய பகுதிகளில் மழை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. புயல் இன்று பிற்பகலுக்கு மேல் கரையை கடக்கும். உங்க ஏரியாவில் மழையா?
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாளை (30.11.2024) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 30.11.2024(முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 07.12.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது
*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ.29) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.