India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் வாயிலாக, நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் 5 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்படும் ஜீப்கள், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக இருப்பதால், கழிவு நீக்கம் செய்ய ஊரக வளர்ச்சி துறை, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஜீப்கள் ஏலம் விடவில்லை. இதனால், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் துருபிடித்து வருகின்றன. அவற்றை ஏலம் விட வலியுறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெங்கள் புயல் மழையின் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிக மழை வந்தாலும் கவலை, குறைந்த மழை பெய்தாலும் கவலை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக உத்திரமேரூரில் 16.5 செ.மீ., காஞ்சிபுரத்தில் 14.5 செ.மீ., செம்பரம்பாக்கம் 13 செ.மீ.,, வாலாஜாபாத் 12 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் 12.4 செ.மீ., குன்றத்தூர் 10.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து மாலை 4 மணி அளவில் 4856 கனஅடியாக இருந்த நிலையில் 8 மணி நிலவரப்படி 5610 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2515 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது.
சென்னை காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் அதி கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் உட்பட ஏழு மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். எனவே மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 61ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 909 ஏரிகள் உள்ள நிலையில் 61 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. மேலும், 75% மேலாக-159ஏரிகளும், 50% மேலாக-246 ஏரிகளும், 25% மேலாக-316ஏரிகளும், 25% கீழாக-126 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரே ஒரு ஏரியில் மட்டும் நீரின்றி இருப்பதாகவும் பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக விடிய விடிய பெய்யும் கனமழையால் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 7 ஏரிகள் 100 சதவீதமும், 67 ஏரிகள் 90 சதவீதமும்,107 ஏரிகள் 75 சதவீதமும்,143 ஏரிகள் 50 சதவீதமும், 56 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மழை தொடர்வதால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் தாலுகா பகுதியில் 7.6 மில்லி மீட்டர், உத்திரமேரூர் தாலுகாவில் 8.00மில்லி மீட்டர், வாலாஜாபாத் தாலுகாவில் 14.6 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் 26.2 மில்லி மீட்டர், குன்றத்தூர் தாலுகாவில் 11.4 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 19 மில்லி மீட்டர் என மழை பொழி பதிவாகியுள்ளது. அதிகபட்சம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா 26.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரையும் இடைவிடாமல் பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஸ்ரீபெரும்புதூரில் அதிகபட்சமாக 2.6 செ.மீ., மழை பதிவாகியது. குன்றத்தூர் 1.1 செ.மீ; வாலாஜாபாத் 1.4 செ.மீ; காஞ்சிபுரம் 0.7 செ.மீ, உத்திரமேரூர் 0.8 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.