Kanchipuram

News December 4, 2024

காஞ்சியில் 573 கனிமவள லாரிகள் விதி மீறல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்கி வரும் நிலையில் கனிமவளத்துறையின் விதிகளை மீறி கனிமவள வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்ததின் பெயரில், சோதனையில் இதுவரை 573 கனிமவள வாகனங்கள் விதிகளை மீறி இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். 

News December 4, 2024

புதிய பொறுப்பாளர் மனு அளிக்க வேண்டுகோள்

image

விசிக தலைவர் திருமாவளவன் ஆணைப்படி, இன்றும் நாளையும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முன்னணி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் தலித்தல்லாதோரை புதிய பொறுப்பாளராக மனு செய்ய காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், காஞ்சிபுரம் சட்டமன்றத்தொகுதி நிர்வாகிகள் மனு செய்ய மாநகர செயலாளர் மதி.ஆதவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News December 4, 2024

3 ஆண்டுகளில் 526 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2021இ ல் இருந்து தற்போது வரை, அதாவது சுமார் 3.5 ஆண்டுகளில் மட்டும் 526 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒலிமுகமதுபேட்டை, சிறுகாவேரிப்பாக்கம், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், ஓரிக்கை, சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் ரேஷன் அரிசியை பதுக்குவது கடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

News December 3, 2024

காஞ்சிபுரத்தில் 383 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

image

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 383 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 247 ஏரிகள் 75%-100% , 148 ஏரிகள் 50%-75%, 129 ஏரிகள் 25%-50% நிறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே ஏரிகளில் ஓரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News December 3, 2024

மின் கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம்

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்து வந்தது. இதனால், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த வரும் டிச.10ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்துங்கள். ஷேர் செய்யுங்கள்.

News December 2, 2024

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் நிறுத்தம்

image

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வாயிலாக தண்ணீர் திறந்து விடபட்டது. செம்பரம்பாக்கம் ஏரி 21 அடியை எட்டும் தருவாயில் உள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

News December 2, 2024

காஞ்சிபுரத்தில் 529 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன

image

வங்கக்கடலில் உருவாகி, கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயலினால் கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மழைப்பொழிவின் காரணமாக, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் (KTCC) மொத்தம் உள்ள 1644 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி 141 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருந்த நிலையில், இன்று (டிச.2) நிலவரப்படி 529 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன (388 ஏரிகள் கூடுதலாக) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 2, 2024

கனமழை சேதம் குறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 23 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் 14 மின்கம்பங்கள் மற்றும் 225 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையால் சேதம் அடைந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டார். 34 மரங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டன. 23 நிவாரண முகாம்களில் தற்போது வரை 564 நபர்கள் தங்கியுள்ளனர்.

News December 2, 2024

காஞ்சிபுரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரி வழக்கம் போல் இயங்கும்

image

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. மற்ற அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

News December 2, 2024

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்டத்தில் முதலமைச்சர் மருந்தகம் அமைப்பதற்கு விரும்புவோர் விண்ணப்பிக்கும் தேதியை நீடித்துள்ளது. இதைத் தொடர்ந்து டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

error: Content is protected !!