Kanchipuram

News December 12, 2024

காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

மாகறலீஸ்வரர் கோயிலின் மகத்துவம் தெரியுமா?

image

மாதுரல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்கிறார்கள்.

News December 11, 2024

காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும்போது, தமிழகத்தில் அந்தந்த இடங்களில் கனமழை பெய்யும். காஞ்சிபுரத்தில் மிதமான மழையும் சில பகுதிகளில் கனமழையும் பெய்யும். ஷேர் பண்ணுங்க

News December 10, 2024

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை 

image

காஞ்சிபுரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விஜயகுமார் என்பவர் போக்ஸோ கைது செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி நசீமா பானு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூபாய் 2,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

News December 10, 2024

பதக்கங்களை வென்ற காஞ்சிபுரம் மாணவர்கள்

image

இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டி ஆரணியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 35 பேர், கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டி 7 பிரிவுகளில் நடந்தது. இதில், மொத்தம் 35 பதக்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை காஞ்சிபுரம் மாணவர்கள் வென்றனர். Way2News சார்பில் வாழ்த்துக்கள்.

News December 10, 2024

விவசாயிகளுக்கு மானிய பவர் டில்லர், பவர் வீடர்

image

தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் வழங்குகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையை RTGS/NEFT மூலம் செலுத்தி இயந்திரங்களை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94440 73322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 10, 2024

காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில், மின் பராமரிப்பு காரணமாக இன்று (டிச.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள சில பகுதிகளான பல்லவர்மேடு, வெள்ளைகேட், காரப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்துார், வையாவூர், இந்திரா நகர், வேளியூர் மற்றும் வையாவூர் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

News December 9, 2024

காஞ்சியில் 6ஆம் கட்ட சுற்று கோமாரி நோய் தடுப்பூசி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 169200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 16.12.2024 முதல் 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். 

News December 9, 2024

மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை பலி

image

கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் நந்தகுமார்(28) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அர்ச்சனா(25). இவர்களது மகன் துவார சந்த் (11மாதம்) 3 பேரும் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். மலையம்பாக்கம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ளவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை துவாரசந்த் பரிதாபமாக இறந்தார். மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வரும் டிசம்பர் 11,12ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

error: Content is protected !!