Kanchipuram

News December 27, 2024

பாதை இல்லை: நெற்பயிரில் சுமந்து செல்லும் அவலம்

image

உத்திரமேரூர் அடுத்த ஓங்கூர் பகுதியில் 160க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், அவர்களை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய போதிய சாலை வசதி இல்லை. நேற்று இந்த பகுதியைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு பாதை இல்லாததால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரின் மீது நடந்து சென்று அடக்கம் செய்தனர்.

News December 27, 2024

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

image

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (டிச.26) வலுவிழந்தது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம் டவுன், ஸ்ரீபெரும்புதூர், வெள்ளை கேட், உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உங்க ஏரியாவில் மழையா?

News December 26, 2024

அனைத்து தொழில்களுக்கும் தொழில் உரிமம் கட்டாயம்

image

காஞ்சிபுரத்தில், பெட்டி கடை முதல் அனைத்து தொழில்களுக்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய விதிகளின்படி பால், பெட்டி, ரசாயனம், நாட்டு மருந்து கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள், கேபிள் டிவி சேவைகள், பேன்சி ஸ்டோர் என 190 வகையான தொழில்களுக்கு தொழில் உரிமம் கட்டாயமாகிறது.

News December 26, 2024

31ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும்

image

தமிழ்நாடு பிறப்பு, இறப்பு விதிகள் 2000இன் படி, குழந்தை பிறந்த 15 ஆண்டுகளுக்குள், பிறப்பு சன்றிதழில் பெயர் பதிவு செய்வது கட்டாயம். இந்த விதி 2025 ஜன.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே, 2009ஆம் ஆண்டும், அதற்கு முன் பிறந்தவர்களும் வரும் 31ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரமேரூர், சாலவாக்கம் பகுதிகளில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

காஞ்சிபுரத்தில் காற்றுடன் கூடிய மழை

image

வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்ச்சத்திரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் டவுன், வாலாஜாபாத், உத்திரமேரூர், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில்?

News December 25, 2024

மகளிர் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

image

காஞ்சிபுரத்தில் நாளை முதல் ஜன.9ம் தேதி வரை, கே.பி.கே., ரத்தினாபாய் கல்யாண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி குழு கண்காட்சி நடக்க உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கலாம். எனவே கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் அழைப்பு 

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் ‘குரூப் – 4’ பதவிகளுக்கான அறிவிப்பு, 2025 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வுக்கு மாதிரி தேர்வுகள், வரும் 27 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

90 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம்

image

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில், நேற்று (24.12.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 90 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.33.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

News December 24, 2024

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அன்புமணி ராமதாஸ்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சங்கரமடம் எதிரே இருக்கும் தந்தை பெரியார் திருஉருவ சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரியார் நினைவு தினத்தை ஒட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரளான பாமகவினர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1000 நாட்கள் கடந்தும் வன்னியர்களுக்கு 10.5%இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!