India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில், பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தலைமையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 9 மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. சமீபத்தில் பாமக கூட்டத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரவில் மின் விளக்குகள் எரியாததால், சமூக விரோதிகள் பலர் மது அருந்த பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து, கலெக்டர் வளாகத்திற்குள் இரவில் வெளிநபர்கள் நுழைவதைதடுக்க, இரவு 10 மணிக்கு மேல் பூட்டி வைக்க கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். எனவே வளாகத்தில் 3 வாயில்களும் மூடப்பட்டன.
காஞ்சிபுரத்தில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மாநகர பிரதான சாலைகளில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது ஜன.01 ஆம் தேதி அதிகாலை 1.00 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும், கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது. மக்களுக்கு இடையூறு, பட்டாசு வெடித்தல் கூடாது உள்ளிட்ட 6 விதிமுறைகளை காவல்துறை வழங்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று இரவு 7 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான GWT, மாநகர பிரதான சாலை மற்றும் மாவட்டத்தின் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 36க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் ஆளிநர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 160-க்கும் மேற்பட்ட கோவில் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணி நடக்க உள்ளதாக எஸ்பி சண்முகம் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், இந்திரா அவென்யூ, அசோக் நகரைச் சேர்ந்தவர் பரணிதரன். இவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க, மின்வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த பஞ்சாட்சரம், ரூ.10,000 லஞ்சமாக கேட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வசந்தகுமார், பஞ்சாட்சரத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி சண்முகம் எச்சரித்துள்ளார். மதுபோதையில் வாகனத்தை இயக்குதல், வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து 9498100260 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி சண்முகம் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 337 மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில், அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் பேரணியாக வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் செங்கழுநீரோடை வீதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து காஞ்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி சண்முகம், போக்குவரத்து நெரிசலை குறைக்க பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கழுநீரோடை வீதி டாஸ்மாக் கடை விரைவில் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனக் கூறினார்.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், கடந்த 24ஆம் தேதி செல்போன் பேசியபடி, தடம் எண்: டி-68 என்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தருமன், மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்தார். அதன்படி, இரு தினங்களுக்கு முன், ஓட்டுநர் தருமனை, 15 நாட்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.