India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.
பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில், திருச்சி, சாயலூரைச் சோ்ந்த 22 வயது இளம் பெண் கடந்த 6 மாதங்களாக பணிபுரிகிறாா். இவா் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றபோது 4 போ் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அப்பெண்ணின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் போலீசார் ரெங்கா, சந்திரசேகா், சக்தி என்ற சதீஷ்குமாரை கைது செய்தனர். வெங்கடேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில், இரவு நேரத்தில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கா, சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகிய 3 இளைஞர்கள் வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு 3 பேரையும் இன்று (பிப்.27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் <
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து பல்லாவரம் பம்மல் பகுதியைச் சதாம் உசேன், சுரேஷ், பரிபாய்தீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி அருகே கருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (23), சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய்(21) ஆகிய இருவரும் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்த நிலையில், போலீசார் ரோந்து பணியின் போது அவர்களை கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் 17 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சக ஊழியர்கள் சென்னையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடைபெற்ற 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார், வாலாஜாபாத் தாலுகா புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (42) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.