Kanchipuram

News January 23, 2025

சமூகப் பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகிய 2 பணியிடங்கள் என மொத்தம் 3 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன், பிப்.,6க்குள், மாமல்லன் நகரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.

News January 23, 2025

காஞ்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும் இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் இதில் கலந்துகொள்ளலாம்.

News January 23, 2025

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு விருது

image

தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய வாக்காளர் தின விழாவில், ஆளுநர் விருதை வழங்க இருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News January 23, 2025

மானிய விலையில் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி

image

தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய மொபைல் போனால் இயங்கும் பம்ப் செட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் பொறியியல் அலுவலர்களை 94440 73322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.

News January 23, 2025

அக்னிவீர் வாயு இணையவழி போட்டித் தேர்வு

image

இந்திய விமானப் படையால் “அக்னிவீர்“வாயு தேர்வுகள் இணையவழியில் 22.03.2025 முதல் நடைபெற உள்ளது. இதில். கலந்துகொள்ள ஜன.27ஆம் தேதி வரை <>https://agnipathvayu.cdac.in<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 01.01.2005 முதல் 01.07.2008 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

News January 22, 2025

குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது

image

காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடியரசு ஒத்திகையில் காவல்துறை சார்பில் அனைவரும் நிகழ்ச்சி ஒத்திகை 2ஆம் நாளாக இன்று நடைபெற்றது. குடியரசு தின விழாவில் பல்வேறு அரசியல் துறை அதிகாரிகளுக்கும், காவல்துறைகளுக்கும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

News January 22, 2025

நாளை கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி 

image

ஏனாத்தூரில் உள்ள கால்நடைத்துறை விவசாயிகள் பயிற்சி மையத்தில் நாளை (ஜனவரி 23) வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் முயல் வளர்ப்பு, முயல் வகைகள், நோய் தடுப்பு, பராமரிப்பு பணிகள், வளர்ப்பு உபகரணங்கள், தீவனம் பற்றி இலவசமாக கால்நடைத்துறை பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் பிரேம வள்ளி அவர்கள் பயிற்சியும் ஆலோசனைகளும் அளிக்க உள்ளார். விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 22, 2025

பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுப்பு

image

காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமை வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது, கோபுரத்தில் உலக அமைதிக்கான நான்கு சிலைகளில் ஒரு சிலையின் அமைப்பு என, வரலாற்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

News January 22, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

image

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 7 வயது சிறுமி, கடந்த 2019 ஏப்ரல் 25ல், தெருவில் விளையாடினார். அப்போது, காஞ்சிபுரம், ஏனாத்துார் பகுதியைச் சேர்ந்த முருகன், 39, என்பவர், தன் வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News January 22, 2025

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கைபேசியால் இயங்கும் பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்,  தெரிவித்தார். மேலும் ஆதிதிராவிடர், சிறுவிவசாயிகள் உள்ளிட்டோர் 50% மானியத்தில் ரூ.7,000/- வரை பெறலாம். இது தொடர்பாக விவசாயிகள் விவரங்களுக்கு 9443483010 அல்லது 9444073322 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!