Kanchipuram

News August 11, 2024

காஞ்சிபுரம் கோவிலில் பிரபல யூடியூபர் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் இன்று கோவிலுக்கு வருகை தந்து காமாட்சி அம்மன் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் குருக்கள் குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பித்தனர். மாரிதாஸ் கண்ட ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News August 11, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.

News August 11, 2024

காஞ்சிபுரம் காய்கறி சந்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரத்தில் 1907-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த மார்கெட் பின்னர், ராஜாஜி காய்கறி சந்தை என பெயர் மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் கடந்ததால் இருந்ததால் பழுதடைந்த இந்த காய்கறி சந்தை இடித்து முற்றிலும் அகற்றப்பட்டு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 248 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணெளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

News August 10, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையருடன் எம்.எல்.ஏ சந்திப்பு

image

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் நவேந்திரனை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு முன்பு இருந்த ஆணையர் செந்தில் முருகன் சென்னை மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 10, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6194 மாணவர்களுக்கு உதவிதொகை

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஏ.டி.எம் கார்டை வழங்கினார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,194 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக இதில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் 2,632 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

News August 9, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

கிராம சபை கூட்டத்திற்கு வரும் பிரேமலதா

image

பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். பரந்தூர் திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வரும் 15ஆம் தேதி ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொள்ள இருப்பதாக பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

News August 9, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு பெய்ய வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா?

News August 9, 2024

‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.

News August 9, 2024

வயநாட்டுக்கு நிவாரண உதவி அளித்த பள்ளி சிறுமி

image

திருப்புக்குழி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் – துளசி தம்பதியின் 7 வயது குழந்தை நேசிகா, திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வயநாடு நிலச்சரிவில் ஏராளமான உயிரிழந்ததோடு, பலரும் வாழ்வாதாரத்துக்கு போராடி வருகின்றனர். நேசிகா, தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை நேற்று தலைமையாசிரியரிடம் கொடுத்து வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!