Kanchipuram

News August 13, 2024

காஞ்சிபுரம் வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகளுடன் கூடிய தொழிலாளர்கள் தங்கும் விடுதி மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆக.17ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து திறந்து வைக்கிறார். உடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் ஆக.15ல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

image

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானம், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆக.15ஆம் தேதி நாள் முழுவதுமாக மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

நகராட்சியாக மாறும் ஸ்ரீபெரும்புதூர்

image

சுற்றுலா, தொழில் என முக்கியத்துவம் வாய்ந்த 10 பேரூராட்சிப் பகுதிகளை, நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை மக்கள் தொகை, ஆண்டு வருமானம் கருத்தில் கொண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல்வர் உத்தேச ஆணையை வெளியிட்டார். தலைமை செயலகத்தில் ஸ்ரீபெரும்புதூர், புதிய நகராட்சியை அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச ஆணையை நேற்று முதல்வர் வழங்கினார்.

News August 13, 2024

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், காஞ்சிபுரத்தின் 5 வட்டாரங்களில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 15ஆம் தேதி அந்தந்த ஊராட்சிகளின் கிராம சேவை மைய கட்டிடத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சுய உதவிக் குழுக்களின் கணக்குகளை பராமரிக்கவும், தணிக்கை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாக்கம், வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், தக்கோலம் அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும், 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. போக்குவரத்துக்கு நெரிசல், சாலையில் நீர்த்தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். மழை பெய்யுமா? பெய்யாதா?

News August 12, 2024

காஞ்சி பயிற்சி மையத்தில் பயின்ற 3 பேருக்கு அரசுப் பணி

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.சி நிலை இரண்டு மற்றும் இரண்டு ஏ – வில் இங்கு பயிற்சி பெற்ற 12 மாணவர்கள் தேர்வில் வெற்றினர். அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் பணி நியமன ஆணை மற்றும் பாராட்டு சான்றிதழை அமைச்சர் அன்பரசன் வழங்கி சிறப்பித்தார்.

News August 12, 2024

காஞ்சியில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு நிதி உதவி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், நீரில் மூழ்கி இறந்தவரின் வாரிசுதாரருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News August 12, 2024

காஞ்சியில் மார்க்கெட்டை திறந்து வைத்த அமைச்சர்

image

காஞ்சிபுரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இராஜாஜி சந்தையை காணொளி வாயிலாக முதல்வர் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சந்தையை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் அவர் காய்கறி வாங்கினார்.

News August 12, 2024

காஞ்சிபுரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாமல்லபுரம், மதுராந்தகம், வாலாஜாபாத், படப்பை உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

error: Content is protected !!