Kanchipuram

News August 15, 2024

தேசிய கொடி ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில், 78ஆவது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார். மேலும், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

News August 15, 2024

காஞ்சிபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், நாளை (ஆக.16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்த 18 – 35 வயதுக்கு உட்ப்பட்டவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 15, 2024

டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

News August 14, 2024

காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனிசமான மழைபொழிவு பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பொழிவு உள்ளதா?

News August 14, 2024

பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

காஞ்சிபுரத்தில் சிறப்பு முகாம்கள் அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் 20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2024

ரூ.2,600 கோடி முதலீடு: 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு

image

44,125 கோடி ரூபாய் மதிப்பிலான 15 புதிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு நேற்று அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “காஞ்சிபுரத்தில் மதர்சன் எலட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.2,600 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், புனல் மின் திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு உள்ள திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.

News August 14, 2024

தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே ஊதியத்தை சரியான தேதியில் செலுத்தாமல் காலம் தாழ்த்தி கொடுப்பதாகவும், ஊதிய உயர்வு கேட்டு பலமுறை முறையிட்டும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து, இன்று தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News August 14, 2024

20 துணை வட்டாட்சியர்கள் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துணை வட்டாட்சியர்கள் பலர், நீதிமன்றம் மற்றும் காவல் துறை பணிகளுக்கு பயிற்சிப் பெற்று 6 ஆண்டுகளாக வட்டாட்சியர் பதவிக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு வெளி மாவட்ட வட்டாட்சியர்களை நியமித்து வரப்படுகிறது. இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து துணை வட்டாட்சியர்கள் 20 பேர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 13, 2024

காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில், வரும் 16ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். SHARE IT

error: Content is protected !!