Kanchipuram

News September 2, 2024

காஞ்சி பெண்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வரும் செப்.5,6 -ஆம் தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் உறுதி

image

காஞ்சிபுரம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி. பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரை இறுதியில் மனிஷா ராமதாஸை 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஷேர் பண்ணுங்க

News September 2, 2024

ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் தகவல்

image

ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம், அக்டோபர் 4ஆம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. வரும் செப்.17ஆம் தேதிக்குள் பெறப்படும் முறையீடுகள் மீது மட்டுமே, அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும். எனவே, வரும் 17ஆம் தேதி க்குள் ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 2, 2024

மாணவி தற்கொலையில் திடுக்கிடும் தகவல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி, பயிலும் ஷெர்லி என்ற மாணவி நேற்றிரவு 5ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம், காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மாணவி காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவருடைய தாயாரும் அவருடன் விடுதியில் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News September 2, 2024

கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தேர்வு: ஆட்சியர் அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் செப்.6ஆம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News September 2, 2024

ராக்கெட் லாஞ்சர் வெடித்து கூலித்தொழிலாளி படுகாயம்

image

சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில், தமிழக அரசின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. அங்கு, அனுமந்தபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோதண்டன்(52), துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகே கிடந்த ராக்கெட் லாஞ்சரை எடுத்து அதை உடைத்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ராக்கெட் லாஞ்சர் வெடித்து சிதறியது. இதில், பலத்த காயம் அடைந்த கோதண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

News September 1, 2024

காஞ்சியில் தேமுதிக 20-ஆம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம்

image

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், செப்டம்பர் 14 கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி காஞ்சியில் தேமுதிக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.

News September 1, 2024

காஞ்சியில் நவராத்திரி கண்காட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவராத்திரி முன்னிட்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. செப் 21 முதல் அக் 6 வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மகளிர் குழு இக்கண்காட்சியில் தங்கள் உற்பத்திகளை விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழுக்கள் கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் வரும் செப் 15 தேதிக்குள் http//exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News September 1, 2024

காஞ்சிபுரம் ஏரிகளின் உபரி நீர் எங்கே செல்கிறது தெரியுமா?

image

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் அடையாறு கால்வாய் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் பயணித்துச் சென்று கடலில் கலக்கும். பல நூறு கன அடி உபரி நீர் அடையாறு கால்வாயில் செல்லும் பொழுது கால்வாயை ஒட்டியுள்ள மணிமங்கலம் முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

News September 1, 2024

புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.25 கோடியில் கடைகள்

image

மதுராந்தகத்தில், புதிய பேருந்து நிலையம் கட்ட கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது 40 சதவீதம் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் மதுராந்தகம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைப்படி பேருந்து நிலையத்தில் கூடுதலாக கடைகள் அமைக்க ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!